தமிழக அரசின் தடையையும் மீறி ஆர்எஸ்எஸ் முகாம் நடத்திய பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பள்ளி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசின் தடையையும் மீறி சென்னை அண்ணாநகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆர்எஸ்எஸ் முகாம் நடைபெற்றது. இதனை கண்டித்தும், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் பள்ளி முன்பு இன்று போராட்டம் நடைபெற்றது.