சென்னை உயர்நீதிமன்றத்தின் நிபந்தனையை ஏற்க முடியாது என்று தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த பேரணியை ஆர்.எஸ்.எஸ் ஒத்திவைத்துள்ளது.
தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், அரமனை, நாங்குநேரி ஆகிய இடங்களை தவிர 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், பேரணி நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் போது பாடல்கள் பாடவோ, தனிப்பட்ட நபர்கள், மதம், ஜாதி குறித்து தவறாகப் பேச கூடாது. தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் குறித்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது, இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படக் கூடாது. லத்தி, கம்பு போன்ற ஆயுதங்கள் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் பல்வேறு வகையான உத்தரவுகளை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், பேரணிக்கு உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று, நாளை நடைபெற இருந்த பேரணியை ஆர்.எஸ்.எஸ் ஒத்திவைத்துள்ளது. மேலும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.