tamilnadu

img

சென்னையில் பாஜகவினரிடம் பிடிபட்ட ரூ.4 கோடி

சென்னை, ஏப். 8 - மக்களவைத் தேர்தலுக்கான தேர்  தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி அண்மையில் வெளியிட்டது. அந்த அறிக்கையின் தமிழாக்கத்தை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வப்பெருந்தகை வெளியிட, காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்  பாளர் அஜோய் குமார் பெற்றுக் கொண்டார்

இந்நிகழ்ச்சியின்போது, செல்வப் பெருந்தகை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “ஐக்கிய  முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான்  மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி  திட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம்  போன்ற புரட்சிகரமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இப்படி ஒரு திட்டம் போன்று, பாஜக மற்றும் மோடி யால் எதையாவது சொல்ல முடியுமா?”  என்றார்.

“தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு முன்பு பாஜக வேட்பாளருக்காக கொண்டு சென்ற ரூ. 4 கோடி பறிமுதல்  செய்யப்பட்டது. இதுவே ஒரு எதிர்க்  கட்சி அல்லது மாநில கட்சி வேட்பா ளரிடம் இருந்து எடுத்திருந்தால் அம லாக்கத்துறை, வருமானவரித் துறை, சிபிஐ சும்மா இருந்திருப்பார்களா? மோடியும், நிர்மலா சீதாராமனும் இது வரை வாய் திறக்கவில்லையே ஏன்?”  என்றும் செல்வப் பெருந்தகை கேள்வி  எழுப்பியுள்ளார்.

மேலும், “பாஜகவிடம் கோடி கோடி யாக பணம் உள்ளது. ஆனால், இந் தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக கட்சிகளின் தொண்டர்கள் டீ வாங்கிக் குடிக்கக் கூட காசு இல்லாமல் தண் ணீர் குடித்துவிட்டு தான் தேர்தல் வேலை  செய்கின்றனர்” என்றும் தெரிவித்தார்.