தனது சொந்த செலவில் கோயில்களை சீரமைத்து தருவதாக கூறிவிட்டு பொதுமக்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்ட பாஜக ஆதரவு யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட்ட வழக்கு மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சிறுவாச்சூர் திருக்கோயில் பெயரை வைத்து சுமார் 50 லட்சம் ரூபாய் வசூல் செய்த மோசடி விவகாரத்தில் இளையபாரதம் யூடியூப் சேனல் நடத்தி வரும் கார்த்திக் கோபிநாத் என்பவருக்கு இந்து சமய அறநிலை துறை ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி இருந்தது.
இந்த நிலையில் ஆவடி மிட்டனமல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இன்று ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் மற்றும் உதவி ஆணையர் கந்தக்குமார் ஆகியோர் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் கார்த்திக் கோபிநாத் தனது சொந்த செலவில் சிலைகளை சீரமைத்து தருவதாக கூறிவிட்டு பொதுமக்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மதுரனகாளியம்மன் கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலை துறை சார்பில் கார்த்திக் கோபிநாத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் வசூல் செய்த பணத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவேண்டும் இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.