சென்னை, ஜூன் 7 சென்னையை பொறுத்த வரை 234.26 கோடிக்கு நிதி ஒதுக்கப்பட்டு குடிநீர் திட்ட பணி கள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ள தாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறினர். பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக் கம் ஏரிகள் வறண்ட காரணத்தால் வீராணம் ஏரியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.இது தவிர கடல் நீரை குடி நீராக்கும் திட்டம் மூலமும், கல்குவாரி தண்ணீரும் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்படு கிறது. ரயில் மூலமாகவும் ஜோலார்பேட்டை யில் இருந்து தண்ணீர் கொண்டு வர ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதுதவிர தாமரைப்பாக்கம் பகுதியில் மாக்ரல், கீழானூரில் 316 விவசாய கிணறு களில் இருந்து தண்ணீர் எடுத்து ராட்சத தொட்டியில் நிரப்பி அங்கிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. அந்த பகுதியில் 13 ‘போர்வெல்’ அமைக்கப்பட்டுள்ளது.வீராணம் பகுதியி லும் 9 போர்வெல் கிணறுகள் அமைக்கப் பட்டு தண்ணீர் எடுக்கப்படுகிறது.சென்னை யில் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதை கருத்தில் கொண்டு குடியிருப்பு பகுதிகளில் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 1190 சிண்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் கூடுத லாக வைக்கப்பட்டு உள்ளது. 850 லாரிகள் மூலம் தினமும் 8500 நடைகள் லாரி தண்ணீர் வினியோகமும் நடைபெறுகிறது. கடந்த 5 ஆண்டுக்கு முன்பு வரை சென்னைக்கு தினமும் 851 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது படிப்படியாக அது குறைக்கப்பட்டு 500 மில்லியன் லிட்டர் என்ற அளவுக்கு வந்துள் ளது. வருகிற நவம்பர் மாதம் வரை இதே அளவில் தண்ணீரை சீராக வழங்க முடியும் என கருதுகிறோம். இவ்வாறு சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்