tamilnadu

img

துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த பிரபல ரவுடி கைது

சென்னை:
சென்னை எண்ணூரில் துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். எண்ணூரைச் சேர்ந்த பிரபல ரவுடியான பி.டீ.ரமேஷ் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் தலைமறைவாக இருந்த நிலையில் இன்று எண்ணூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.எண்ணூரைச் சேர்ந்த கஞ்சி செந்தில் என்பவர் ஸ்டான்லி மருத்துவமனையில் குண்டடி பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் நடத்திய விசாரணையில் பி.டீ. ரமேசின் துப்பாக்கியை வைத்து அலெக்சாண்டர் என்ற தனது நண்பர், குடிபோதையில் சுட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படை யிலேயே பி.டீ.ரமேஷை போலீசார் கைது செய்தனர்.கோத்தகிரியில் தலைமறைவாக இருந்த அலெக்சாண்ட ரும் கைது செய்யப்பட்டார்.

;