tamilnadu

img

இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு

திருவண்ணாமலை, செப். 27- திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு திவ்யா கல்வி நிறுவனத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு திவ்யா கல்வி நிறுவனங்களின் தாளாளர் பா.செல்வராஜன் தலைமை தாங்கினார். கல்வி நிறு வனங்களின் செயலாளர் டாக்டர் செந்தில்குமார் துணைத்தலைவர் பிரவீன் குமார் நிர்வாக ஆலோசகர் போதனா பிரவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .  இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்  சர் எ.வ.வேலு மாணவர்க ளிடையே  பேசுகையில், “சமூக நீதிக்காகவும் இட  ஒதுக்கீடுக்காவும், பெண்க ளுக்காகவும் பல்வேறு தீர்மா னங்களை இயற்றியவர் பகுத்தறிவு பகலவன் பெரியார்” என்றார். பெரியார் அவர்கள் பெண்களை படிக்க வேண்டும் எனக் கூறியவர். பெண்களின் வாழ்வா தாரத்தை உயர்த்த வேண் டும், பெண்களுக்கு சொத்  தில் சம உரிமை வழங்க வேண்டும் எனவும் பாடுபட்ட வர். தற்போது தந்தை பெரி யாரின் கொள்கைக்கு  ஆபத்து ஏற்பட்டுள் ளது. சமச்சீர் கல்வியின் மூலம் தகுதி அடிப்படையில் பல மருத்துவர்கள் உருவாக்கும் நிலை நீட் தேர்வு என்ற பெய ரில் நாம் ஏமாந்து போய் உள்ளோம் என்றும் அவர் கூறினார்.