tamilnadu

img

மீண்டும் அதிகரித்த சமையல் எரிவாயு உருளை விலை!

சமையல் எரிவாயு உருளையின் விலை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்திருப்பது சாமானிய மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து சமையல் எரிவாயு உருளையின் விலையும் அதிகரித்துவருகிறது. கடந்த 7ஆம் தேதி வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு 1000 ரூபாயைக் கடந்தது. 

இந்நிலையில் தற்போது மீண்டும் ரூ.3 உயர்த்தப்பட்டு ரூ.1018.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதுமட்டுமின்றி வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளையின் விலையும் ரூ.8 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு உருளையின் விலை ரூ.2,507 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

;