சென்னை, டிச . 2 - நிலமற்ற பட்டியலின மக்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் இடது சாரி மற்றும் மக்கள் இயக்கங்கள் சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை விடுதலைப் போராட்ட வீரர் ஆர்.நல்லகண்ணு நிறைவு செய்தார்.
இந்தியா முழுவதிலும் உள்ள பட்டியலின மக்களுக்கான கோரிக் கைகளை முன்வைத்து இடதுசாரி கள் மற்றும் தலித், ஜனநாயக இயக்கங்கள் சார்பாக ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்றது. குறிப்பாக, நாட்டின் பொதுச் சொத்துக்கள், வளங்களில் பட்டியலின மக்கள் சமமான பங்கினை பெற்றிட வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும், நிலச் சீர்திருத்தம் மேற்கொண்டு நிலமற்ற பட்டியலின மக்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும், தொழில், கொள்முதல், ஒப்பந்தங்களில் பட்டியலின மக்களுக்கு உரிய ஒதுக்கீடு வழங்க வேண்டும்,
தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும், நீதித்துறை, பாது காப்புத் துறையில் உரிய ஒதுக் கீட்டை உறுதி செய்ய வேண்டும், மனித கழிவை மனிதனே அகற்றும் முறையை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக டிச.4 அன்று தில்லி யில் பல லட்சம் பேர் பேரணியாக சென்று குடியரசுத் தலைவரிடம் கையெழுத்துக்களை ஒப்படைக்க உள்ளார்.
இதன் ஒரு பகுதியாக தமிழ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்ற கையெழுத்து இயக்கத்தை விடுதலைப் போராட்ட வீரர் ஆர். நல்லகண்ணு கையெ ழுத்திட்டு நிறைவு செய்தார்.
இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிறப்பு தலைவர் எஸ்.கே.மகேந் திரன், பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ், துணைச் செயலாளர்கள் பி.சுகந்தி, வேணி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஜானகிராமன் (வடசென்னை), ஆனந்த் (மத்திய சென்னை), ச.லெனின், மணி கண்டன், முரளி, ம.சித்ரகலா, எஸ்.சரவணசெல்வி (தென்சென்னை), ஏவிஎம் சீனிவாசன் (ராணிப் பேட்டை), தமிழ்நாடு ஒடுக்கப் பட்டோர் வாழ்வுரிமை இயக்கத் தின் பொதுச்செயலாளர் மு.வீர பாண்டியன், செயலாளர் எஸ்.கே.சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.