tamilnadu

இடஒதுக்கீடு விவகாரம்: தமிழக ஆளுநருக்கு தலைவர்கள் கண்டனம்....

சென்னை:
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க, சுமார் ஒரு மாதம் அவகாசம் தேவை என ஆளுநர் கூறியிருப்பதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.நீட் தேர்வால் பாதிக்கப்படுவதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஆளுநர் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் இன்னமும் ஒப்புதல் தரவில்லை. இதனால் மருத்துவ மாணவர் சேர்க்கை தாமதமாகி வருகிறதுஇந்த மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு, அரசியல் கட்சிகளின் கோரிக்கை. ஆனால் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க இன்னும் 4 வார கால அவகாசம் தேவை என்பது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிலைப்பாடு.இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் ஆளுநர் பன்வாரிலால் கூறியிருக்கிறார்.

இன்று ஆர்ப்பாட்டம்
இதனிடையே ஆளுநர் ஒப்புதல் தராமல் தாமதிப்பதைக் கண்டித்து சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு சனியன்றுதிமுக போராட்டம் நடத்துவதாக அறிவித்திருக்கிறது.

கி.வீரமணி
திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘தமிழக அரசு பள்ளிகளில் படித்து - நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வெந்த புண்ணில்: கே.எஸ்.அழகிரி
காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை செயல்படுத்தினால்தான் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவேன் என்று ஆளுநர் கூறியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது சமூக நீதியைக் குழி தோண்டி புதைக்கிற செயல்” என்று கடுமையாக சாடியிருக்கிறார்.எதிர்க்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு மேலும் 3 முதல் 4 வாரங்கள் அவகாசம் தேவைப்படும் என்று ஆளுநர் கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயல்” என்றும் அழகிரி தெரிவித்துள்ளார்.

அழுத்தம் கொடுப்போம்: ஜெயக்குமார்
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச் சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். அப்போது, 7.5 விழுக் காடு உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஆளுநரிடம் அமைச் சர்கள் நாங்கள் நேரில் வலியுறுத்தினோம். ஆளுநருக்கு நாங் கள் அழுத்தம் கொடுத்தோம்.அதேநேரத்தில் ஆளுநரை நாம் கட்டாயப்படுத்தவும் முடியாது. இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் எங்களிடம் தெரிவித்த கருத்துகளையும் வெளியில் கூற முடியாது. ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.