பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள்
ராணிப்பேட்டை, ஜூன் 11– ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தொழிலாளர் துறை இணைந்து செவ்வா யன்று (ஜூன் 10) ஆற்காடு பகுதியில் தனியார் கடை களில் குழந்தை தொழி லாளர்கள் தடுப்பு நட வடிக்கை ஆய்வு மேற்கொண்டனர். தகவல் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற தீக்கதிர் செய்தியாளர் பற்றி தனியார் கடை பணியாளர்களிடம் ஆய்வு மேற்கொள்ள வந்த தொழிலாளர் துறை ஆய்வாளர் செந்தில்குமார், மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகு களப்பணி யாளர் கார்த்திகா ஆகி யோர் “செய்தியாளர் வந்து விட்டார்” “புகைப்படம் எடுத்துவிட்டார்” எங்க ளுக்கு எதுவும் தெரியாது எனக்கூறிவிட்டு அங்கிருந்து வேக வேகமாக புறப்பட்ட னர். ஏதோ செய்தியாளர் சொல்லித்தான் கடைக்கு வந்தாக கருதிய கடைக் காரர் தீக்கதிர் செய்தி யாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்றார். இது தொடர்பாக கடை வாடிக்கையாளர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது ஒரு சில அரசு அதி காரிகள் ஆய்வு என்ற பெயரில் வசூல் வேட்டை யில் ஈடுபடுவதாக கூறப்படு கிறது. இதற்கு செய்தி யாளர்கள் தடையாக உள்ளதால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை அதிகாரிகளே உருவாக்குகிறார்கள். எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக அச்சமின்றி தங்களதுபணியை ஆற்ற பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் சக பத்திரிகையாளர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.