tamilnadu

img

பி.எப்.பணத்தை வழங்கக் கோரி ராம்கி தலைமையகத்தை முற்றுகையிட்ட துப்புரவு தொழிலாளர்கள்

சென்னை, மார்ச் 2- சென்னை பெருமாநகராட்சியில் மண்டலம் 9, 10, 13 ஆகிய 3 மண்டலங்க ளில் ஹைதராபாத்தை தலைமையிட மாகக் கொண்ட ராம்கி என்ற நிறுவனம் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிறுவனத்தில் அதிகாரிகள், தொழிலாளர்கள் என 5,116 பேர் பணி புரிகின்றனர். இந்நிறுவனம் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி பணத்தை வழங்கக் கோரி செங்கொடி சங்கம் (சிஐடியு) சார்பில் சென்னை பூந்த மல்லி நெடுஞ்சாலையில் பச்சையப் பன் கல்லூரி அருகே உள்ள ராம்கி நிறுவனத்தின் தலைமையகத்தை பொதுச் செயலாளர் சீனிவாசலு தலைமையில் துப்புரவு தொழி லாளர்கள் திங்களன்று (மார்ச் 2) முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலைவர் எஸ்.கே.மகேந்திரன் பேசியதாவது:- மொத்தம் உள்ள 15 மண்டலங்கள் உள்ளது. 12 மண்டலங்களில் 5 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்படு கின்றன. ஆனால் ராம்கி நிறுவனம் துப்புரவு பணி மேற்கொள்ளும் 3 மண்டலங்களில் மட்டும் 3 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்படுவதாக கணக்கு காட்டப்படுகிறது. 12 மண்டலங்களிலேயே 5 ஆயிரம் டன்தான் குப்பை என்றால், 3 மண்ட லங்களில் மட்டும் 3 ஆயிரம் டன்  குப்பை எப்படி என எந்த மாநகராட்சி அதிகாரிகளும் கேள்வி கேட்ப தில்லை. இந்த தொழிலாளர்கள் 2012ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த போது 4 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டது. 8 ஆண்டுகள் கடந்த நிலையில் வெறும் 8 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் கூறிய குறைந்தபட்ச தினசரி ஊதியம் 379 ரூபாயைக் கூட இந்நிறுவனம் வழங்கவில்லை. ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் கடந்த 10 ஆண்டில் 10 மடங்கு ஊதியம் அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தில் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு மூலமாகத்தான் தொழிலாளர்கள் பணிக்கு சேர்ந்தார்கள். இப்போது 8 ஆண்டுகள் கடந்த நிலையில் தொழிலாளர்களை பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு வா அப்போது தான் பி.எப். பணம் வழங்கப்படும் என நிறுவனத்தின் கண்காணிப்பாளர்கள் தொழிலாளர்களை மிரட்டுகின்றனர். பி.எப். பணத்திற்கும் பாஸ்போர்ட்டு க்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. பி.எப். பணம் வழங்காமல் ஏமாற்றும் இந்நிறுவனத்தின் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. இப்போது 1500 பேருக்கு பெயர், பிறந்த தேதி மாறியுள்ளதாக நிர்வாகத்தரப்பில் கூறப்படுகிறது. 8 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்களின் பெயர், பிறந்த தேதி எப்படி மாறும் என கேள்வி எழுப்பி னார். ஒவ்வொரு தொழிலாளிக்கும் பி.எப். மற்றும் பணிக்கொடை என 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வழங்க வேண்டியுள்ளது. ஏறக்குறைய 17 கோடி ரூபாய் தொழி லாளர்களின் பணத்தை இந்நிறுவனம் மோசடி செய்துள்ளது.  எனவே மாநகராட்சி நிர்வாகமும், அரசும் இந்நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளின் குடியிருப்பு களில் குப்பைகளை அகற்ற மாட்டோம். மேலும் வருகின்ற 16ஆம் தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்துவோம். உயர்நீதிமன்றத்தில் இந்நிறுவனத்தின் மோசடி குறித்து வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். துப்புரவு தொழிலாளி முனியம்மா கூறுகையில், சங்கத்தில் உறுப்பினாராக இருந்தாலோ அல்லது ஏதாவது கேட்டாலோ, எங்கள் பகுதியில் பணி முடிந்த பிறகு வேறு பகுகளில் குப்பைகளை அகற்றச் சொல்லி நிர்பந்திக்கி றார்கள். வயதானவர்கள் என்று கூட பார்க்காமல் இரவு பணி வழங்கப்படுகிறது. ஒரு தொழிலாளி பாஸ்போர்ட் எடுக்க விண்ணப்பித் திருந்தார், அதற்காக காவல் துறையி னர் அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். உடனே வீட்டின் உரிமையாளர் காவல் துறை வந்து விசாரணை நடத்து கிறதே உடனே வீட்டை காலி செய்யுங்கள் எனக் கூறியுள்ளார். எனவே நிர்வாகம் எங்களுக்கு ஏற்கனவே நாங்கள் வழங்கிய ஆவணத்தை வைத்தே எங்களுக்கு பணத்தை வழங்க வேண்டும். பாஸ்போர்ட் கேட்டு நிர்பந்திக்கக் கூடாது என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில்  துணை பொதுச் செயலாளர்கள் தேவராஜ், முனுசாமி, வி.ராஜன், துணைத் தலைவர் எம்.கிருஷணமூர்த்தி, ராம்கி நிறுவன பொருப்பாளர் பால கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்ட னர்.  இறுதியில் ராம்கி நிறுவன பொதுமேலாளர் ரவி, எச்.ஆர். கார்த்திக் ஆகியோரை சந்தித்து சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். அதிகாரிகள் ஒரு மாதத்திற்குள் 1500 தொழிலாளர்களின் கணக்கு சரி செய்யப்பட்டு பிடித்தம் செய்த பணம் செலுத்தப்படும் என்றும், பாஸ்போர்ட் இனி கேட்க மாட்டோம், ஊழியர்களை பழிவாங்க மாட்டோம் என்றும் உறுதியளித்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.