சென்னை, ஏப். 23 - காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் ஆணவப்படு கொலை செய்யப்பட்டவரின் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுபற்றிய விவரம் வருமாறு: சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பிரவீன் (26). மெக்கானிக் வேலை செய்து வந்தார். ஜல்லடியன்பேட்டை சாய் கணேஷ் நகரைச் சேர்ந்த சர்மிளா(21) என்ற பெண்ணை பிரவீன் காதலித்து வந்தார்.
பிரவீன் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதால் சர்மிளாவின் குடும்பத்தினர் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். அதை மீறி 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி சீர்திருத்த திரு மணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், திருமணமாகி 4 மாதமே ஆன நிலையில், 2024 ஆம் ஆண்டு பிப்.24 அன்று இரவு பள்ளிக்கரணை டாஸ்மாக் கடை அருகே பிரவீனை, சர்மிளா வின் அண்ணன் தினேஷ் தலைமையிலான கும்பல் வெட்டிக் கொன்றது. இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குடன், வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 325 பிரிவுகளின் கீழ் பள்ளிக்கரணை காவல் துறையினர் வழக்கு பதிந்தனர்.
குற்ற வாளிகள் 5 பேரை கைது செய்தனர். இந்த நிலையில், பிரவீன் பிரிவை தாங்காத சர்மிளா, ஏப்.14 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி திங்களன்று (ஏப்.23) அவர் உயிரிழந்தார்.
இந்த தற்கொலை முடிவுக்கு பெற்றோர் கள் துரை குமார், சரளா, சகோதரர்கள் நரேஷ், தினேஷ் ஆகியோர் தான் காரணம் என்று சர்மிளா எழுதி வைத்திருந்த கடி தத்தை காவல்துறையினர் கண்டெடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாதர் சங்கம் கோரிக்கை
தலித் இளைஞன் பிரவீன், பிற்படுத் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்ப வரை காதலித்து பெண் வீட்டாரின் எதிர்ப்பை யும் மீறி சென்னை பெரியார் திடலில் பதிவு திருமணம் செய்து கொண்டதால் ஷர்மிளா வின் சகோதரர்களால் பிரவீன் படு கொலை செய்யப்பட்டார். இதனால் மன உளைச்சலோடு இருந்து வந்த ஷர்மிளா தற்கொலை கொண்டார். நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் ஷர்மிளா தனது பெற்றோர் மற்றும் மற்றொரு சகோதரர் உள்ளிட்ட அனைவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். குற்றவாளி கள் அனைவரும் தண்டனையை பெற வேண்டும் என்ற ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு அவர் தற்கொலை செய்தி ருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே, இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி வழக்கை துரிதமாக நடத்தி முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு கேட்டுக்கொண்டுள்ளது.