சென்னை, ஏப்.25- பைபிள், மூலதனம் நூல்கள் வரி சையில் உலகத்தில் அதிக மொழி களில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் களில் ஒன்று திருக்குறள். உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறள் எக்காலத்திற்குமான கருத்துக்களை தரும் அட்சய பாத்திரமாக உள்ளது. திருக்குறளை யும், திருவள்ளுவரையும் பெரு மைப்படுத்தும் விதமாக வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது.
1974 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் அடிக்கல் நாட்டப்பட்டு 1976 ஆம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 5 ஏக்கர் நில பரப்பளவில் திராவிட கலை மற்றும் பல்லவர் கட்டிடக் கலையுடன் வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது. நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு அமைக்கப்பட்ட இந்த நினைவுச் சின்னம் அதன் சிறந்த கட்டிடக் கலைக்கு பெயர் பெற்றது. புதுமை யான அமைப்புகளுடனும் அமைக் கப்பட்டது. தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக வள்ளுவர் கோட்டம் விளங்குகிறது.
அழகிய தோரணவாயில், புல்வெளியோடு அடர்ந்த மரங்க ளோடு அமைந்த வள்ளுவர் கோட்டத் தின் சிறப்பம்சங்களில் ஒன்று தூண்களே இல்லாத மிகப்பெரிய அரங்கமாகும். இந்த அரங்கத்தில் 1330 குறள்பாக்களும் பொறிக்கப் பட்டுள்ளது. ஆசியாவில் உள்ள மிகப்பெரிய அரங்கங்களில் ஒன்றான இந்த அரங்கில் சுமார் 4,000 பேர் அமர்ந்து நிகழ்வுகளை காண முடியும். இங்குள்ள கல்தேர் 128 உயரமும், 67 மீட்டர் அகலமும் கொண்டது. திருவாரூர் கோவில் தேரின் பிரதியாக இந்த கல்தேர் அமைக்கப்பட்டுள்ளது. கற்களால் ஆன தேரில் திருவள்ளுவர் சிலை மிகவும் உயிரோட்டத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
வள்ளுவர் கோட்டம் கட்டி 50 ஆண்டுகள் ஆன நிலையில் புதுப்பித்து சீரமைக்கும் பணிக்கு தமிழக அரசு ரூ.80 கோடி ஒதுக்கியது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது உள்ள தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கலையரங்கம், மாற்றுத்திறனாளிகள் நடைபாதை, உணவு கூடம், விற்பனை கூடம், மழைநீர் சேகரிப்பு வசதி, ஒலி,ஒளி காட்சிக் கூடம், நுழைவாயில் புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற் குள் பணிகளை முடிக்க அரசு திட்ட மிட்டுள்ளது.
புனரமைக்கப்பட உள்ள பணிகள்
கலையரங்கம், 1490 இருக்கைகளு டன் கூடியதாகவும், நவீன வசதி அமைப்புகளுடன் ஒலி, ஒளி, குளிர்சா தன வசதியுடன் புதுப்பிக்கப்பட உள்ளது. பழமை மாறாமல் முன்னர் வடிவமைக்கப்பட்ட அதே முறையில் புனரமைக்கப்பட உள்ளது.
குறள்மணி மாடத்தில் உள்ள தூண்களில் பித்தளை பலகையில் திருக்குறள் மற்றும் கலைஞரின் விளக்க உரை பொறிக்கப்படவுள்ளது.
திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் நூலகம் நவீன வசதிகளுடன் புனரமைப்பு செய்யப்படுகிறது.
71,000 சதுர அடி பரப்பளவில் 273 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் சுற்றுப்பகுதியில் சுமார் 50 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதி தோரண வாயிலின் இருபுறம் மாற்றுத்திறனாளி கள் எளிதாக வந்துச் செல்ல சாய்வு தள வசதியுடன் கூடிய நுழைவாயில்.
பார்வை மாற்றுத்திறனாளி களுக்கு சிறப்பு தரை அமைப்பு மற்றும் பிரெய்லி எழுத்து பலகை வசதி.
திருவள்ளுவரின் சிலை காண நகரும் படிக்கட்டுகள், நீரியல் மின் தூக்கி வசதி.
உட்புற பாதை புதுப்பித்தல், மழைநீர் சேகரிப்பு மற்றும் வடிகால் வசதி புனரமைத்தல்.
2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல்.
உயர் அழுத்த மின் வசதி, 250 கிலோ வாட் திறன் கொண்ட ஜெனரேட்டர் மற்றும் இதர மின் அமைப்புகள் புதுப்பித்தல். சுற்றுச்சுவர் சிற்ப வேலைபாடுகளுடன் புனரமைத்தல்,
ஊடாடடும் கணிப்பொறியகம், இசைநடன நீரூற்று அமைத்தல், நவீன உணவு கூடம், புல்வெளி மற்றும் ஒளி, ஒலி அமைத்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.