சிறுமிகள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம்
சென்னை, பிப்.28- கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் அருகே சிறுமிகள் சஜிதா (13), தர்ஷினி (13) ஆகியோர் விளையாடிக் கொண்டி ருந்த போது, கடல்நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இறந்த சிறுமிகளின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், சிறுமிகளின் குடும்பத்தினருக்கு முதல மைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள் ளார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
கடலூர்,பிப்.28- பண்ருட்டி தொகுதி அதிமுக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் வீடு உட் பட அவர் தொடர்புடைய 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் புதனன்று சோதனை மேற்கொண்டனர். பண்ருட்டி நகர்மன்றத் தலைவராக இருந்த சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி ஆணையர் பெருமாள் உள்ளிட்டோர் டெண்டர் விடுவதில் ரூ. 20 லட்சம் பண மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட் டில், லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்கா ணிப்பாளர் தேவநாதன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் பிப்.28 அன்று சோதனையில் ஈடுபட்டனர்.
பெரியார் பல்கலை.துணைவேந்தர் மீது நடவடிக்கை: அமைச்சர்
சென்னை, பிப். 28 - சேலம் பெரியார் பல் கலை. பதிவாளரை பணி யிடை நீக்கம் செய்ய வில்லை என்றால் துணை வேந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண் ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “உயர்கல்வித்துறை 2 முறை கடிதம் எழுதியும் பதிவாளர் தங்கவேலு வை துணைவேந்தர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யவில்லை. சென்னை பல்கலை.யில் முறைகேட்டில் ஈடு பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும்” என்று கூறியுள்ளார்.