சென்னை,மார்ச்10- சிறுநீரகத்தை ஆரோக்கியமாக பராமரிப் பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஓட்டம் சென்னையில் ஞாயிறன்று (மார்ச் 10) நடை பெற்றது.
மார்ச் 14 ஆம் தேதி உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு ஏஐஎன்யூ மருத்துவமனை சார்பில் 2 வது ஆண்டாக இந்த விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. அடையாறு ஆல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி பெசன்ட்நகர் வரை 5 கிலோமீட்டர் தொலை விற்கு நடைபெற்ற இந்த ஓட்டத்தில் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறுநீரக பராமரிப்பிற்கான விழிப்புணர்வை மிகுந்த ஆர்வத்துடன் வெளிப்படுத்தினர்.
ஒட்டத்தை நடிகர் சந்தோஷ் பிரதாப் கொடியசைத்து தொடங்கிவைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் உறுப்பினர் செயலாளர் மேகநாதன் ரெட்டி, ஏஜி&பி பிரதம் நிறுவன நிர்வாகி சிரதீப் தத்தா, ஏஐஎன்யூ மருத்துவமனை யின் மூத்த நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். நான்கு குழுக்களாக வரையறுக்கப்பட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் ஒவ்வொரு குழு விலும் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் பல்வேறு பரிசுகள் வழங் கப்பட்டன.