சென்னை, ஆக.12- டயாலிசிஸ் நோயாளி கள் கூடுமான வரை குறித்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று பிரபல சிறுநீரக நிபுணர் டாக்டர் சுரேஷ் சங்கர் கேட்டுக்கொண்டார். சென்னையில் ஆண்டுக்கு ஒரு முறை நடை பெறும் டயாலிசிஸ் நோயாளி களுடன் மருத்துவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி இந்தாண்டு ஞாயிறன்று (ஆக.11) நடைபெற்றது. நெஃப்ரோ பிளஸ் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் நோயாளி கள் கேட்ட பல்வேறு சந்தே கங்கள் மற்றும் கேள்வி களுக்கு மருத்துவர்கள் பதில் அளித்தனர். அதிகமாக சாப்பிடாமல் விட்டு விட்டு சாப்பிட வேண்டும், நேரம் தவறி விட்டது என்று கருதாமல் கூடுமான வரை குறித்த நேரத்தில் சாப்பிட பழக்கிக்கொள்ளவேண்டும், ஒரு நாள் சாப்பிடாமல் இருந்தால் ரத்த அழுத்தம் அதிகமாகி விடும் என்பது பழைய ஆய்வுகள் ஆனால்தற்போது அந்த ஆய்வுகள் சரியாக இருப்ப தில்லை என்றார் டாக்டர் சங்கர்.இந்த நிகழ்ச்சியில் பிஸ்துலா பற்றியும் பரா மரிப்பு பற்றியும் டாக்டர் அனுப் குமார், டயாலிசிஸ் டயட் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கீதா நாயகி ஆகியோர் பேசினர்.