விருதுநகர், ஜூன் 15- விருதுநகர் மாவட்டம், திரு வில்லிபுத்தூரில் உள்ள அய்யம் பட்டி, மங்காபுரம் ஆகிய பகுதி களைச் சேர்ந்த முதியோர் களுக்கு தமிழக அரசின் சார்பில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால்,, அவர் களின் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதிதாக ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கப்பட வில்லை. இதனால், முதியோர் களுக்கு ரேசன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, மண்ணெண் ணெய், பாமாயில் உள்ளிட்ட எந்தப் பொருட்களும் வழங்கவில்லை. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த உதவித் தொகை பெறும் மூதாட்டிகள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் தங்களுக்கு ரேசன் கார்டு, உணவுப் பொருட் கள் வழங்க வேண்டும் என கோரிக்கை ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து ரத்தினம் என்ற மூதாட்டி கூறியதாவது: உதவித் தொகை பெறுவதற்கு முன்பு வரை நியாய விலைக் கடை யில் குடும்ப அட்டை மூலம் இல வச அரிசி, பருப்பு, மண்ணெண் ணெய் பெற்று வந்தேன். ஆனால், திடீரென ரேசன் கடையில் பொருட்கள் வழங்கவில்லை. எனவே, மீண்டும் உணவுப் பொருட்கள் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டுமென்றார்.