tamilnadu

img

சென்னை அருகே குளிர்சாதன இயந்திர தயாரிப்புஆலை

சென்னை, அக்.17 ஆந்திராவில் உள்ள ஸ்ரீசிட்டியில் பிரபல குளிர்பதன இயந்திரங்கள் தயாரிக்கும் பூளு ஸ்டார் நிறுவனம் புதிய ஆலையை அமைத்து வருகிறது. இதன் பணிகள் 2022ல் முடிவடை யும் என்று சென்னையில் செய்தியாளர்க ளிடம்பேசிய அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் பி.தியாகராஜன் கூறினார். அவர்மேலும் கூறுகையில், தமது நிறுவனம் நடப்பாண்டில்  15 விழுக்காடு முதல் 17விழுக்காடு வரை வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றார். வீடுகள் மற்றும் வணிக குளிர்பதன இயந்திரதயாரிப்பில் கணிசமான சந்தை பங்களிப்பை கொண்டுள்ள தமது நிறுவனம்  முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலியை அதன் பிராண்ட் தூதராக மாற்றுவதன் மூலம் தனது சந்தை பங்கை உயர்த்துவதற்கான ஒரு  தீவிரமான திட்டத்தை வகுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.  குளிர்சாதன  தொழில் நடப்பு நிதியாண்டில் 10 விழுக்காடு முதல் 12விழுக்காடு வரை வளர்ச்சி விகிதத்தை எட்டும். நாங்கள் எங்களது வளர்ச்சியை 15 முதல் 17 விழுக்காடு  வரை உயர்த்துவோம் என்றார். அனைத்து நகரங்களிலும் விற்பனை மையங்களை உருவாக்குதல், விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குதல் மற்றும் மின்னணு வலைதள விற்பனையை  மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும், ”என்று அவர் கூறினார் பொருளாதார மந்தநிலை இருந்த போதிலும், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் தமது நிறுவனம் சிறப்பாக செயல்பட்டுள்ளது, சாதாரண மழைக்காலம் மற்றும் பண்டிகை காலம் காரணமாக மீத முள்ள மாதங்களிலும் இதே முடிவை எதிர்பார்க்கிறது என்றார் அவர்.