tamilnadu

img

வாசிப்புதான் நல்ல மனிதர்களை உருவாக்கும் புத்தக திருவிழாவில் க.அறிவொளி பேச்சு

சென்னை, ஏப். 24 - வாசிப்புதான் குழந்தைகளை நல்ல மனிதர்களாக மாற்றும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் க.அறி வொளி கூறினார்.

ஓஎம்ஆர் புத்தகக்காட்சி செவ்வா யன்று (ஏப்.23) பெருங்குடி சுங்கச் சாவடி அருகே உள்ள வள்ளலார் சன்மார்க்க அரங்கில் தொடங்கியது. இந்த புத்தகக்காட்சி மே 2ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த புத்தகக்காட்சி தொடக்க நிகழ்வுக்கு தலைமை தாங்கி பேசிய பேராசிரியர் வி.முருகன், “தமிழில் அறி வியல் நூல்கள் குறைவாக உள்ளது. இன்றுள்ள சூழ்நிலையை பயன்படுத்தி பிரபலமான அறிவியல் நூல்களை கொண்டு வர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

பாடப்புத்தகத்தை தாண்டி படியுங்கள்
புத்தகக்காட்சியை தொடங்கி வைத்து தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் க.அறி வொளி பேசுகையில், “பாடப் புத்தகங்களை தாண்டி படித்த புத்த கங்கள்தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தி உள்ளது. 50 ஆயிரம் பள்ளி களை நிர்வாகிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளேன். நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தவர்கள் மிகப்பெரிய வெற்றியாளர்கள் இல்லை. குறைந்த மதிப்பெண் பெற்றாலும், பாடப் புத்தகத்தை தாண்டி படித்தவர்கள் மிகப்பெரிய வெற்றியாளர்களாக உள்ளனர். எனவே, பாடப்புத்த கங்களை தாண்டி படியுங்கள்” என்றார்.     “லாபநோக்கமின்றி, சமூகத்திற்காக, சமூகப்பார்வையோடு நூல்களை வெளியிடும் பதிப்பகங்களில் பாரதி புத்தகாலயம் முதன்மையாக உள்ளது. சமூகத்திற்கு சொல்ல வேண்டிய, நூறு ஆண்டுகளுக்கு தேவையான புத்த கங்களை, தமிழர்களின் செறிவான வாழ்வை மக்களிடம் கடத்துகிற பணியை பாரதி புத்தகாலயம் செய்து வருகிறது” என்று குறிப்பிட்ட அவர், “வீட்டு விழாக்களின்போது விருந்தி னர்களுக்கு புத்தகங்களை பரிசளி யுங்கள். வாசிப்பு மட்டுமே குழந்தை களை மனிதர்களாக மாற்றும்; நல்ல மனிதர்களாக மாறும்போதுதான் சமூகம் செழிக்கும்”என்றும் அவர் கூறி னார்.

ஊக்குவிக்க வேண்டும்
புத்தக விற்பனையை தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனை யாளர் சங்கத் தலைவர் (பபாசி) சேது சொக்கலிங்கம், விற்பனையை தொடங்கி வைத்து பேசுகையில், “இளந் தலைமுறையிடம் படிக்கும் ஆர்வம் உள்ளது. அதை ஊக்கு விக்க வேண்டும். மழை வெள்ளத் திலும் சென்னை புத்தகக் காட்சியில் மக்கள் சாரைசாரையாக வந்து சென்ற னர். அரசும் வாசிப்பு இயக்கத்தை ஊக்குவிக்கிறது. அதனை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

புத்தகங்கள் தீங்கு செய்யாது
திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி பேசுகையில், “குழந்தைகளிடம் இருந்த செல்போனை எப்படி வாங்கு வது? பெற்றோர்கள், ஆசிரியர்கள் பேச்சை கேட்காத குழந்தைகள் கூகுள் சொன்னால் கேட்கிறார்கள். படித்து  வளர்ந்த தலைமுறையை சேர்ந்த நாங்கள், பார்த்து தெரிந்த தலை முறை முன்னால் நிற்கிறோம். இந்த நிலையில் காலத்தின் தேவையாக புத்த கக்காட்சிகள் தேவைப்படுகிறது” என்றார்.

“என்னுடைய ஒவ்வொரு படத்தி லும் ஏதாவது ஒரு காட்சியில் நூலகம் இருக்கும். ஏனெனில் நூலகத்தால் தான் நான் உருவானேன். கிராமத்தில் இருந்த எனக்கு நூலகம்தான் நம்பிக்கையூட்டியது. எனவே, இளந்தலைமுறையை வாசிக்க வைக்க வேண்டும். புத்தகங்கள் மரம் போன்றது. அதன் பக்கங்கள் இலை கள் போன்றது. மரம் ஒருபோதும் மனி தனுக்கு தீங்கு செய்யாது” என்றும் அவர் கூறினார்.

முதல் புத்தக அறிமுகம்
நிகழ்வில் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் ஆயிஷா நடராஜன், “பாரதியாரை கைது செய்ய  காவலர்கள் தேடிக் கொண்டிருக்கும் போது தலையை மொட்டை அடித்து கொண்டு மாறுவேடத்தில் வந்து ரங்க ராஜன் அய்யங்காரிடம் இருந்த தில கரின் புத்தகத்தை இரவோடு இரவாக  படித்துவிட்டு சென்றார். அடுத்தநாள் பத்திரிகையில் அந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தி எழுதினார். அது தான் தமிழில் வந்த முதல் புத்தக அறி முகம்” என்ற தகவலை கூறி நெப்போலி யன், ராமானுஜர், மேக்நாட் சாகா, அம்பேத்கர் ஆகியோரின் புத்தக வாசிப்புகளை விவரித்தார்.

இந்த நிகழ்வில், ஆயிஷா நட ராஜன் எழுதிய ‘வாசிப்பே வெல்லும்? பள்ளி நூலகங்களை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்?’ எனும் நூலை க.அறிவொளி வெளியிட, இயக்குநர் சீனுராமசாமி பெற்றுக் கொண்டார்.