tamilnadu

img

அறிவுத் திருவிழா தொடங்கியது

மிகப்பெரிய அறிவுத்திருவிழாவான 47ஆவது சென்னை புத்தகக் காட்சி புதனன்று (ஜன.3) நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் துவங்கியது. இதனை மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) நடத்தும் இந்த புத்தக்காட்சி தொடக்க விழாவில், முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகள், பாபசி விருதுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் வாசித்த முதலமைச்சரின் வாழ்த்து செய்தி:

தமிழ்நாட்டின் மிகப்பெரிய அறிவுத் திருவிழாவான சென்னை புத்தகக் காட்சி இன்னும் சில ஆண்டுகளில் 50-ஆவது ஆண்டு புத்தகக் கண்காட்சி நடத்த உள்ளது. இது வாசிப்பின் மீதும் அறிவு தேடலின் மீதும் பற்று கொண்டு பகுத்தறிவாலும் முற்போக்குச் சிந்தனையாலும் தமிழ்ச் சமூகம் முன்னோக்கி நடை போடுவதன் அடையாளம். வாசிப்புப் பழக்கம் என்பது ஒரு தனிமனிதரின் அறிவுத்திறத்தின் அடையாளம் மட்டுமல்ல, ஒரு சமூகம் -மாநிலம் நாடு எந்த அளவு வளர்ந்துள்ளது என்பதற்கான அடையாளம்.

38 நாடுகள் பங்கேற்பு
உலகளாவிய அறிவுப் பரி மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு நமது செழுமையான தமிழ் இலக்கி யப் படைப்புகளை உலகம் முழுக்க எடுத்துச் செல்லவும், சிறந்த பன்னாட்டு அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பெற்று தமிழில் அவற்றை வழங்க வும் நடத்தப்பட உள்ள  பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் 38 நாடுகள் பங்கேற்க இருக்கின்றன. ஜன.16-18 தேதிகளில் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் 6 கோடி ரூபாய் செலவில் நடை பெற இருக்கிறது.

இலக்கிய முகவர்கள்
ஆங்கில எழுத்துலகத்தில் இருப் பதைப் போலவே 20 இலக்கிய முகவர்களைப் பயிற்சி கொடுத்து தமிழ்நாடு அரசு உருவாக்கி இருக் கிறது. எழுத்தாளர்களுக்கும் வெளி நாட்டுப் பதிப்பு நிறுவனங்களுக்கு மான பாலமாக இந்த இலக்கிய முக வர்கள் இருப்பார்கள். தமிழ்ப் படைப்புகள் உலகின் பிற மொழி களுக்குக் கொண்டு செல்லப்படும். இந்தியாவில் எந்த மொழிக்கும் இப்படி இலக்கிய முகவர்கள் இல்லை என்கிற அளவில் இந்த முயற்சியை நாம்மேற்கொண்டு வருகிறோம்.

மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்துவோம்
புத்தகங்கள் வாங்குகிற பழக் கத்தை, நூலகங்களுக்குச் செல்கிற பழக்கத்தைப் பள்ளிக்காலத்தி லேயே மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். புதிய சிந்தனைகளை கல்லூரி மாணவர்களிடம் உரு வாக்க வேண்டும். இது தமிழ்ப் பற்றை, தமிழார்வத்தை, தமிழு ணர்ச்சியை, தமிழ் எழுச்சியை உரு வாக்கும். தமிழ் ஆர்வத்தை உரு வாக்குபவையாகப் புத்தகக் காட்சிகள் செயல்பட்டு வரு கின்றன. தமிழினம் சிறக்க வேண்டு மானால் தமிழ்மொழி சிறக்க வேண்டும். தமிழ்மொழி செழிக்கு மானால் தமிழினம் செழிக்கும். தமிழ்மொழியும் இனமும் செழிக்கப் புத்தகங்கள் துணைநிற்கட்டும்.

கலைஞர் பொற்கிழி விருது பெற்றோர்

முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகள் உரைநடைக்கு பே.ஆ.சிவசுப்பிரமணியன், மொழிபெயப்புக்கு மயிலைபாலு, கவிதைக்கு உமா மகேஸ்வரி, நாவலுக்கு தமிழ்மகன், சிறுகதைக்கு அழகிய பெரியவன், நாடகத்திற்கு வேலு.சரணவன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. பாபாசி வழங்கும் பதிப்பக்கச் செம்மல் க.கணபதி விருது ச.அனுஷ்க்கும் (எதிர் வெளியீடு), சிறந்த நூலகருக்கான விருது ஆசைத்தம்பிக்கும், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது கிரி டிரேடிங் கம்பெனிக்கும், குழந்தை எழுத்தாளருக்கான குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா விருது எழுத்தாளர் சி.எஸ்.தேவநானுக்கும், பெண் எழுத்தாளருக்கான, முதன் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது இன்பா ஆலோசியஸ்க்கும், சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது எழுத்தாளர் மு.வேலைய்யனுக்கும், முத்தமிழ்க் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் கவிதை இலக்கிய விருது இலக்கிய நடராஜனுக்கும், தன்னம்பிக்கை நூலுக்கான சிந்தனைக் கவிஞர் கவிதாசன் விருது எழுத்தாளர் கமலநாதனுக்கும் வழங்கப்பட்டது.