tamilnadu

img

தீர்ப்பின் பகுதி என்பதாலேயே பிற்போக்குத்தனங்களை அங்கீகரிக்கக் கூடாது! க.கனகராஜ்

தீர்ப்புகள் உள்நோக்கம் கொண்டவையாக இருந்தால் அவை உள்நோக்கம் கொண்டவை என்று விமர்சிப்பதில் என்ன தவறு.

நீதிபதிகளும் தீர்ப்புகளும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கவேண்டுமே தவிர நீதிபதிகள் தங்கள் தனிப்பட்ட பிற்போக்குத்தனமான கொள்கை நிலைபாடுகளை தீர்ப்பின் பகுதியாக மாற்றும்போது அவை விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும்.

நீதிபதி ஜிஆர் சாமிநாதனின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது காஞ்சி சங்கராச்சாரியார் மரியாதை செலுத்த மறுத்தது மற்றும் மாரிதாஸ் மீதான வழக்குகளின் தீர்ப்புகள் அவரின் தனிப்பட்ட கொள்கை நிலைபாடுகளின் தொகுப்பாகவே இருக்கின்றன.

இரண்டு வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞராகவே மாறியிருக்கிறார்.

முந்தைய வழக்கில் தமிழ் ஆர்வலரென்றால் ஐந்து குறள்களாவது அறிந்திருக்க வேண்டுமென எதிர்பார்ப்பவர் பிந்தைய வழக்கில் மாரிதாஸின் தேசபக்தியை எந்த அடிப்படையில் மெச்சுகிறார்என்று தெரியவில்லை.

ஆட்டோ சங்கர் கலாச்சார காவலர்,கோட்சே கருணாமூர்த்தி,மாரிதாஸ் விடுதலைப்போராட்ட வீரர் என எந்த அபத்தத்தையும் எந்த ஒரு தனி மனிதனிதனும் கொண்டாடிவிட்டுப் போகட்டும்.ஆனால் நீதிபதி கொண்டாடினால் அது தீர்ப்பாக இருந்தால் அதை ஏற்றமுடியாது;ஏற்கக் கூடாது.

சக நீதிபதிகள்,வழக்கறிஞர் சமூகம்,அறிவுத்துறையினர் ,அரசியல் கட்சிகள் இதில் அமைதிகாப்பது ஆபத்தானது