tamilnadu

img

பாஜக ஆட்சியில் நடைபெற்ற ரஃபேல் பேர ஊழல்

பாஜக ஆட்சியில் நடைபெற்ற ரஃபேல் பேர ஊழல் குறித்து பாரதி புத்தகாலயம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள எஸ். விஜயனின் ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ குறித்தான புத்தக மறு பதிப்பு வெளியீட்டு விழா புதுச்சேரி தமிழ்சங்கத்தில் நடைபெற்றது. முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பிரதேசத் தலைவர் வீர.அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பேரா.க.பஞ்சாங்கம் நூலை வெளியிட்டார். தமுஎகச வின் தமிழ்மாநில பொருளாளர் சு.ராமச்சந்திரன், கவிஞர் பால்கி, அரசு ஊழியர் சம்மேளன கவுரவத்தலைவர் சி.எச்.பாலமோகனன், பத்திரி கையாளர் தனிகைதம்பி, எழுத்தாளர்கள் பாலகங்காதரன்,வில்லியனூர் பழனி, ஏ.சத்தியா, ம.கலியமுர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

;