tamilnadu

img

கடலூர் அருகே ரேசன் கடையில் உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

கடலூர், ஏப்,23-  கடலூர் அடுத்த சிங்கிரி குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரேஷன் கடை உள்ளது.  இந்த ரேஷன் கடையில் ஞாயிறன்று (ஏப்,23) காலை கூட்டுறவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் திடீரென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் கடை களில் இருந்த பொருட்களும், அரசு பதி வேட்டில் குறிப் பிடப்பட்டிருந்த பொருட் களின் விபரமும் சரியாக உள்ளதா? என்பதை பார்வையிட்டார். பின்னர் பொதுமக்களுக்கு எந்தவித குறை களும் இல்லாமல் அரசு நிர்ணயித்தபடி அனைத்து பொருட்களும் சரியான முறையில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.  மேலும் ரேஷன் கடை கட்டி டங்களை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் இடுபொருட்கள் மற்றும் டிராக்டர்களை பார்வையிட்டார். அப்போது கடலூர் மண்டல இணைப் பதிவாளர் நந்த குமார், மேலாண்மை இயக்குனர் திலீப் குமார், துணை பதிவாளர்கள் ராஜேந்திரன், துரைசாமி, அலுவலர் உதய குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர். முன்னதாக அவர் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.