tamilnadu

img

தமிழக தடகள வீரர் மாரியப்பனுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது...  

சென்னை 
விளையாட்டுத்துறையில் சாதிக்கும் இந்தியர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா, துரோணாச்சார்யா ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்படும். இந்த விருதுகளில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது முதன்மையானதாகும். அர்ஜுனா விருது 2-ஆம் நிலை விருதாகவும், துரோணாச்சார்யா விருது பயிற்சியாளர்களுக்கான விருதாகவும் உள்ளது.

இந்நிலையில், நடப்பாண்டிற்கான விளையாட்டுத்துறை விருதுகள் இன்று மாலை (ஆக., - 21) அறிவிக்கப்பட்டுள்ளது. உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு முதன்முறையாக ஒரே நேரத்தில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக பாரா - ஒலிம்பிக் தடகள வீரரும், ரியோ பாரா ஒலிம்பிக் தொடரில் (உயரம் தாண்டுதலில்) தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவருடன், 

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன்  - ரோஹித் சர்மா 

டேபிள் டென்னிஸ் வீராங்கனை  - மணிஹா பத்ரா 

மல்யுத்த வீராங்கனை  - வினேஷ் போகத் 

ஹாக்கி வீராங்கனை  - ராணி 

ஆகியோருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அர்ஜுனா விருதிற்கு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா உள்ளிட்ட 27 பேருக்கும், துரோணாச்சார்யா விருதிற்கு 8 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

;