சென்னை,ஜூலை 14- ரயில்வேயை பொது த்துறை நிறுவனமாக தொடர்ந்து பாதுகாக்க வேண்டியதின் அவசியம் குறித்து சென்னையில் ஞாயிறன்று தட்சின ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்.இ.யூ) இளைஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கை நடத்தியது. டி ஆர் யு செயல் தலைவர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டை உதவித் தலைவர் ஆர் இளங்கோவன் துவக்கி வைத்து பேசினார் துணைப் பொதுச் செயலாளர் பேபி ஷகிலா அறிக்கை சமர்ப்பித்தார். ஓடும் தொழி லாளர் கழக இணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி வாழ்த்துரை வழங்கினார் நிறைவாக டி. ஆர்.இ. யூ பொதுச்செயலாளர் மேத்யூ சிரியாக் நிறைவுரையாற்றி னார். 100 நாள் வேலைத் திட்டம் என்ற பெயரில் ரயில்வே முக்கிய தடங்கள், உற்பத்தி பிரிவு கள், பணிமனை ஆகிய வற்றை தனியாருக்கு தரைவார்க்க முயற்சிக்கும் மத்திய மோடி அரசை கண்டித்தும், ராயபுரம் ரயில்வே அச்சகம் உள்பட ஐந்து அச்சகங்களை மூடும் உத்தரவை கைவிடக்கோரி யும், புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்தும் தலை வர்கள் உரையாற்றினர். இடமாற்றல் கேட்டு விண்ணப்பித்தவர்களின் கோரிக்கையை நிறை வேற்ற வேண்டும், வெளிப்படைத்தன்மையுடன் இடமாற்றல் நடைபெற வேண்டும் எனவும் ரீ எங்கேஜ்மேன்ட் என்ற பெயரில் இளைஞர்கள் வேலை வாய்ப்பை பறிக்கக்கூடாது, வேலையில் இருப்பவர்களின் பதவி உயர்வை காலத்தில் வழங்கவேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். டி.ஆர்.இ.யு சென்னை ஓர்க்ஷாப் மற்றும் தலைமை அலுவலக எக்ஸ்ட்ரா டிவிஷன் சார்பில் இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.