புதுச்சேரி தீயணைப்பு நிலையத்தில் நிலைய அதிகாரியாக பணியாற்றி வரும் மனோகரன் மீட்புப்பணியின் போது சமீபத்தில் எதிர்பாரத விதமாக விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவர் மேல் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றார். பணியின்போது படு காயமடைந்த மனோகரின் மருத்துவ சிகிச்சைக் காக முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் நாராயணசாமி மனோகரனிடம் வழங்கினார்.