tamilnadu

img

தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றி தனியாரிடம் ஒப்படைக்கும்  மத்திய அரசின் முடிவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் உள்ள 41 பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றி தனியாரிடம் ஒப்படைக்கும்  மத்திய அரசின் முடிவைக் கண்டித்து ஆவடியில் உள்ள ஒசிஎப் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். அகில இந்திய பாதுகாப்புத் துறை தொழிலாளர்கள் சம்மேளனம், ஐஎன்டியுசி, பிஎம்எஸ், தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. சம்மேளன பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார்  தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி, ராஜ்குமார், சோமு, தனசேகர் (தொமுச), பூபாலன், ராஜன், சடையன், ராமமூர்த்தி (சிஐடியு) உள்ளிட்டோர் பேசினர்.