கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்று இடத்தில் அமைக்கக் கோரிய போராட்டம் வெற்றி
ருவண்ணாமலை, ஜூன் 19- திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த அய்யம் பாளையம் கிராமம் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆரணி நகருக்கு அருகிலுள்ள அய்யம்பாளையம் சுற்றுவட்டார கிராமங்களில் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். விவ சாயம் மற்றும் நெசவுத் தொழிலை நம்பி இப்பகுதி மக்கள் வசித்து வரு கின்றனர். இந்த பகுதியில் கழிவுநீர் சுத்தகரிப்பு ஆலை அமைக்கப்பட்டால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும், பல் வேறு தொற்று நோய்கள் உண்டாகும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரி வித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுத்தகரிப்பு ஆலை அமைக்கப்படு வதை கைவிடக் கோரி ஜூன் 5 தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் டி.கே.வெங்கடேசன் தலை மையில் நடைபெற்ற போராட்டத் தில் மாநில துணைச் செயலாளர் பி.பெருமாள் கண்டன உரையாற்றி னார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.கே.வெங்க டேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ப.செல்வன், நகர செயலாளர் எம்.பிரகலநாதன், சிஐடியு மாவட்ட துணை தலைவர் எம்.வீர பத்திரன், நிர்வாகிகள் பி.கணபதி, இரா.அண்ணா மலை, ஏ.லட்சுமணன், எஸ்.அருண் குமார், வி.மாணிக்கம், எஸ்.ரமேஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ஆரணி நாடாளு மன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணி வேந்தன் அப்பகுதி மக்களை சந்தித்து சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பொது மக்களிடம் நடத்திய ஆலோசனையின் போது மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் கழிவு நீர் நிலையம் அமைக்கப் படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.