ரெட்டியார் பேட்டைக்கு தனி ரேசன் கடை கோரி போராட்டம்
தின் கீழ் இயங்கு வரும் ரெட்டியார் பேட்டை பகுதிக்கு தனி ரேசன் கடை அமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 232 குடும்ப அட்டைகள் உள்ள இப்பகுதி மக்கள் கடந்த 8 ஆண்டுகளாக தனி ரேசன் கடை கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அருகிலுள்ள கிராமத்திற்கு சென்று ரேசன் பொருட்கள் வாங்கும்போது தகராறுகள் ஏற்படு வதாகவும், வயதானவர்கள் நீண்ட தூரம் பொருட்களை எடுத்துச் செல்ல சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (மே 27) ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து குடும்ப அட்டைகளை கையில் ஏந்தி முழக்கமிட்டனர். சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையில், கிராம தலைவர்கள் ஜி.கிருஷ்ண மூர்த்தி, கே.அஞ்சப்பன் ஆகியோர் முன்னி லையில் போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் ஜே.ராஜேஷ் கண்ணன், ஆர்.அமர்நாத், ஒன்றியச் செயலாளர் ஆர்.பஞ்சாட்சரம், மூத்த தலைவர் எஸ்.தட்சிணாமூர்த்தி, வி.வைத்தியலிங்கம், பி.அல்லி முத்து, வி.ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, மாவட்ட வழங்கல் அலுவலர், தனி வட்டாட்சியர் ஆகியோர் போராட்டம் நடத்திய தலைவர்களை மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்ய செந்தில்குமாரிடம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ரெட்டியார் பேட்டை கிராமத்திற்கு தனி குடும்ப கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.