tamilnadu

img

100 நாள் வேலைசம்பள பாக்கியை உடனே வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலைசம்பள பாக்கியை உடனே வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர், மே 27 -  100 நாள் வேலை சம்பளம் பாக்கியை வழங்கக் கோரி கம்மாபுரத்தில் சிபிஎம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய கிராமங்க ளில் 100 நாள் வேலை அனைவருக்கும் வழங்க வேண்டும், 100 நாள் வேலை செய்த அனைவருக்கும் சம்பள பாக்கித் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், குறிப்பாக கோ.பொன்னேரி, கம்மாபுரம், பெருவரப்பூர் உள்ளிட்ட கிராம மக்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் கோ.பொன்னேரி பழைய தெருவில் தரமற்ற முறையில் கட்டப் பட்டுள்ள குப்பை தரம் பிரிக்கும் கொட்ட கையை சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். கட்சியின் கம்மாபுரம் ஒன்றியச் செய லாளர் ஆர்.கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், மாவட்ட துணைச் செயலாளர் மணி, ஆர்.இளங்கோவன், பி.வீரமணி, வி.வீரமணி, தமிழ்மணி, ஆர்.கிருஷ்ணமூர்த்தி, வி.வினோதினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதியிடம் கொடுக்கப்பட்டது.