tamilnadu

img

வேலையின்மையை போக்கக்கோரி நெய்வேலியில் கிளர்ச்சி பிரச்சாரம்

வேலையின்மையை போக்கக்கோரி  நெய்வேலியில் கிளர்ச்சி பிரச்சாரம்

கடலூர், ஜூன் 13- வேலையின்மையை போக்க கோரி நெய்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கிளர்ச்சி பிரச்சாரம் நடை பெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் பங்கேற்றார். காலி பணியிடங்களை நிரப்ப கோரி யும், அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி நெய்வேலியில் இந்திரா நகர் எம்.ஆர்.கே.சாலை அருகில் இருந்து நடைபயண பிரச்சாரம் தொடங்கியது. வழி நிதியிலும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் நடைபெற்றது. நிறைவாக ஆர்ச் கேட்டு அருகே பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மணி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்ட செயலாளர் கோ.மாதவன், முன்னாள் மாவட்ட செயலாளர் டி.ஆறு முகம், செயற்குழு உறுப்பினர் எஸ்.திரு அரசு, நெய்வேலி நகர செயலாளர் ஆர்.பாலமுருகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் வி.மேரி, நெய்வேலி சிஐடியு சங்க தலை வர் ஜெயராமன், பொருளாளர சீனுவாசன் உள்ளிட்டோர் பேசினார்கள். நகர குழு உறுப்பினர் அன்பழகன் நன்றி கூறினார். கடலூர் கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி கிளர்ச்சி பிரச்சாரம் நடைபெற்றது. குண்டு உப்பளவாடி கடை தெருவில் இருந்து மஞ்சக்குப்பம் மணிகூண்டு வரையில் நடை பயணமாக சென்று பொது மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த பிரச்சாரத்தில் மாநகர செயலாளர் ஆர். அமர்நாத் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி. வெங்கடேசன், எஸ்.கே.பக்கிரார், குடியிருப்போர் சங்கத்தின் சிறப்பு தலைவர் எம். மருதவாணன், எம்.மனோரஞ்சிதம், எஸ்.கே.தேவநாதன், தமிழ்மணி, பால்கி, மாணவர் சங்க நிர்வாகி சௌமியா, சகினா பாரதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பிரச்சாரம் செய்தனர்.