tamilnadu

img

தொலைக்காட்சியில் ஆபாசத்தை தூண்டும் விளம்பரங்களுக்கு தடை

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் கருத்தடை சாதனங்கள், வாசனை திரவியங்கள், உள்ளாடை ஆகியவைகளின் விளம்பரங்களில் அதிக ஆபாச காட்சிகள் உள்ளதால், ஆபாசத்தை தூண்டும் விளம்பரங்களுக்கு உயர்நீதி மன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்கள், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் நேரங்களை விட விளம்பரங்களே அதிக அளவில் ஒளிபரப்பாகி வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள், பூங்காக்கள், பொழுதுபோக்கும் இடங்களுக்கு செல்ல தடை நீடிப்பதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வீட்டிற்கு இருந்து வருகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும் ஒரே பொழுது போக்கு தொலைக்காட்சி மட்டுமே ஆகும்.

தொலைக்காட்சிகளில் வெளியாகும் கருத்தடை சாதனம், உள்ளாடை மற்றும் அழகு பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் ஆபாச உணர்வை தூண்டுவதாக உள்ளதாக தடை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் பாலியல் ரீதியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இரவு 12 மணி முதல் காலை 6 மணிக்குள் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவை பின் தொடரப்படுவதில்லை என்றும், அதுபோல உள்ளாடை, கருத்தடை சாதங்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களின் விளம்பரங்களில் அதீத ஆபாச காட்சிகள் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், ஆபாச விளம்பரங்கள் தொடர்பான புகார் குறித்து தமிழக செய்தி, தகவல் தொழில்நுட்ப துறை செயலர் உள்ளிட்டவர்களை 2 வாரங்களுக்கு விளக்கம் கேட்டு உத்திரவிட்டுள்ளது. தொலைக்காட்சியில் வெளியாகும் இவ்வாறான ஆபாச விளம்பரங்களுக்கும் இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே ஆன்லைன், ஒடிடி, இணைய தளங்களில் வெளியாகும் செய்திகளுக்கு மத்திய அரசு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.