tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அரசு பேருந்து பயணிகளுக்கு பரிசு:  3 பேர் தேர்வு

சென்னை,பிப்.3- தொலைதூரம் செல்லும் அரசு  பேருந்துகளில் பயணிக்க, இணைய தளம் மற்றும் செயலி மூலம் பொது மக்கள் முன்பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முன்பதிவு செய்து வார  நாட்கள் (பண்டிகை நாட்கள், வெள்ளி, சனி, ஞாயிறு நீங்கலாக) பயணிப்ப வர்களில் 3 பேரை தேர்வு செய்து, தலா  ரூ.10 ஆயிரம் வழங்கும் திட்டம் ஜனவரி  முதல் அமல்படுத்தப்படும் என்று  அறிவிக்கப்பட்டது.

வார நாட்களில்  அரசு பேருந்துகளில் பயணிப்பவர் களை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை சேப்பாக் கம் விருந்தினர் மாளிகையில் நடை பெற்ற நிகழ்ச்சியில், வார நாட்களில் விரைவு பேருந்துகளில் பயணம் செய்த வர்களில் 3 பேரை கணினி குலுக்கல் முறையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தேர்ந் தெடுத்தார்.

அதன்படி, இசக்கி முருகன், சீதா,  ஆரிப் ஆகிய 3 பேருக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய  அமைச்சர், ‘‘அரசு விரைவு பேருந்து சேவையை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.  தேர்வானவர்களுக்கு தலா ரூ.10 ஆயி ரம் விரைவில் வழங்கப்பட உள்ளது.

219 மருந்து விற்பனை நிறுவனங்கள் உரிமம் ரத்து

சென்னை,பிப்.3- தமிழ்நாட்டில் விதி மீறல்களில்  ஈடுபட்ட 219 மருந்து விற்பனை  நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு  சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு துறை யின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள மொத்த மற்றும் சில்லறை மருந்து  விற்பனை நிறுவனங்களில் தொடர்ச்சி யாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 9 மாதங்களில் விதி மீறல்களில்  ஈடுபட்ட 219 மொத்த மற்றும் சில்லறை  மருந்து விற்பனை நிறுவனங்களின் மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலி கமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 381 மருந்து விற்பனை யாளர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தரமற்ற மருந்துகள் விற்பனை செய்த மொத்த விற்பனை நிறுவனங் களின் 21 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட் டுள்ளன.

சில மருந்துகள் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை,  விநியோகம் செய்த 9 மருந்து விற்பனை மையத்தின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இனி வருங்காலங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துகள் மற்றும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை,  விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற் கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவேரி வனவிலங்கு சரணாலயத்தில்  2 புலிகள்

சென்னை,பிப்.3- காவேரி வடக்கு வனவிலங்கு சரணா லயத்திற்கு உட்டபட்டது ஓசூர் வனக்கோட்டம். இங்குள்ள ஜூவால கிரி காப்புக் காடுகள் சரக பகுதியில்  4 முதல் 5 வயது மற்றும் 8 முதல் 9 வயதுள்ள இரண்டு ஆண் புலிகளின் புகைப்படம் பதிவாகியுள்ளது.

 50 வருடங்களுக்கு பிறகு, புலிகள் தென்பட்டது. இது மிகுந்த முக்கியத் துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்று ஓசூர் வன உயிரினக் காப்பாளர் கார்த்திகாயினி தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை உறுதி செய்துள்ள தலைமை வன உயிரினக்காப்பாளர் சீனிவாஸ் ஆர். ரெட்டி, இந்த மாதம்  பொருத்தப்பட்ட கேமரா பதிவுகள் மூலம் இரண்டு புலிகளின் புகைப்படங் கள் பதிவாகி உள்ளது தெரிய வருகிறது.

இந்த சரகம் சமீபத்தில் அறிவிக்கப் பட்ட காவேரி தெற்கு வன உயிரின சரணா லயத்தை ஒட்டி அமைந்துள் ளது. தமிழ்நாடு அரசு, வன உயிரி னங்களைப் பாதுகாக்க எடுத்து வரும் வெற்றிகரமான நடவடிக்கையின் எதிரொலி இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.