சென்னை, மார்ச் 4- சென்னையின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அளந்துவிட்டார். சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் திங்களன்று (மார்ச் 4) நடந்த பாஜக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத் தில் பேசிய பிரதமர் மோடி திறமை, வர்த்த கம், பாரம்பரியம் ஆகியவற்றின் மையப் புள்ளியாக சென்னை திகழ்கிறது. எனக்கும் தமிழ்நாட்டுக் குமான உறவு மிகவும் பழமை யானது என்று கூறிக்கொண்டார்.
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் சேர பெரிய கட்சிகள் தயக்கம் காட்டி வரும் நிலையில் அந்த ஏமாற்றத்தை மறைப்பதற் காக “தமிழ்நாட்டுக்கு வருவது சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது என்று கூறிக் கொண்டார். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஆதரவு பெரு குவதால் சிலருக்கு அச்சம் அடைவதாக கூறிய அவர், சென்னையில் வளர்ச்சி திட்டங் களுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செல விடப்படுகிறது. சென்னையில் மெட்ரோ, விமான நிலையங்கள் என பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முன்னெத்து வருகிறோம்” என்றார். ஆனால் இந்த பிரதமர் தான் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ஒன்றிய அரசின் பங்குத்தொகையை தராமல் ஏமாற்றி வருகிறார். அதைதிட்டமிட்டு மறைத்து விட்டு எல்லாவற்றையும் கொடுத்து வருவதாக வாய்கூசாமல் பொய் சொன்னார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பாஜக ஒன்றிய அரசு உறுதியாக உள்ளது என்று கூறிய மோடி மதுரை எய்ம்ஸ் வளர்ச்சியில் ஒன்றிய அரசுக்கு உள்ள பங்கு குறித்து ஏனோ பேச மறந்துவிட்டார். அதானிக்காக 24 மணிநேரமும் உழைக்கும் பிரதமர், தமக்கு தேசமே முதன்மையானது. அதனால்தான், இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் என்னை அவ மதிப்பது என புதிய சூத்திரத்தை கண்டு பிடித்துள்ளதாக கூறி அனுதாபம் தேட முயன்றார்.எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். நாட்டு மக்கள் 140 கோடி பேரும் எனது குடும்பத்தினர்தான். கோடிக்கணக்கான மகள்கள், அம்மாக்கள், சகோதரிகள் அனைவரும் மோடியின் குடும்பத்தவர்கள்தான். நாட்டின் ஒவ்வொரு ஏழையும் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். யாருமே இல்லாதவர்கள்கூட அவர்களும் மோடிக்கு சொந்தமானவர்கள்.
அவர்கள் மோடி குடும்பம் என சொல்கிறார்கள் என்றும் மோடி கூறிக்கொண்டார். தொடர்ந்து பேசிய மோடி,அண்மையில் சென்னையில் மிகப் பெரிய புயல் வந்தது. இதனால், சென்னையில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால், திமுக அரசு அவதிப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்குப் பதிலாக, மக்களின் கவலையை மேலும் மேலும் அதிகரிக்கும் வேலையைத்தான் செய்திருக்கிறது என்று மற்றொரு பொய்யை சொன்னார்.
திமுக அரசு விரைந்து எடுத்த நடவடிக்கையால் தண்ணீர் வேகமாக வடிந்ததை அவர் மறந்தார். வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட சென்னைக்கும் திரு நெல்வேலி, தூத்துக்குடிக்கும் நிவார ணத்தை வழங்காமல் ஒன்றிய அரசின் வஞ்சகத்தை மறைக்கிறோமே என்று கொஞ்சம்கூட குற்ற உணர்வே இல்லாமல் பேசி விட்டுச்சென்றுள்ளார். பாஜக மாநிலத்தலைவர் அண்ணா மலை பேசுகையில், அடுத்த 60 நாட்கள் இந்திய அரசியலில் முக்கியமான நாட்கள். ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை அறி வித்துள்ளார் மோடி. அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டங்களை கையில் வைத்துள்ளார் பிரதமர். அதற்கான அடித் தளத்தை 2024 தேர்தலில் அமைக்க தயா ராக இருக்கிறார்” என்று அவர் பங்கிற்கு அளந்துவிட்டார்.