tamilnadu

img

பிரதமர் மோடியின் ‘தந்தி டிவி’ பொய்கள்... ஜி.கே. வாசன், அன்புமணிக்கே வெளிச்சம்!

பிரதமர் மோடி அவர்கள் தந்தி  டிவி-க்கு அளித்த நேர்காண லைப் பார்த்தேன். தமிழ்நாட்  டின் முகத்தையே மாற்றி அமைக்கப்  போகும் மூன்று திட்டங்கள் குறித்து  அவர் தெரிவித்திருந்தார். அது குறித்து எனது நினைவில் இருக்கும்  சில தகவல்களைப் பகிர விரும்பு கின்றேன்.

1.பிரதமர் மோடி அவர்கள் தந்தி  டிவி-க்கு அளித்த நேர்காண லைப் பார்த்தேன். தமிழ்நாட்  டின் முகத்தையே மாற்றி அமைக்கப்  போகும் மூன்று திட்டங்கள் குறித்து  அவர் தெரிவித்திருந்தார். அது குறித்து எனது நினைவில் இருக்கும்  சில தகவல்களைப் பகிர விரும்பு கின்றேன்.

2017-இல் திருமதி நிர்மலா சீதா ராமன் ராணுவ அமைச்சராக இருக்  கும்போது அறிவிக்கப்பட்ட திட்டம்  இத்திட்டம் என்பது என் நினைவு.  இதோடு உத்தரப்பிரதேச மாநிலத்துக்  கும் ஒரு defence corridor அறி விக்கப்பட்டது. உத்தரப்பிரதேச காரி டாரில் இதுவரை ரூ. 12000 கோடி அள வில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் முதலீடு செய்து தொழிற்சாலைகள் அங்கே  உற்பத்தியைத் துவங்கிவிட்டன. தனியாக காரிடார் அறிவிக்கப்படா மலே குஜராத்தில் பல பன்னாட்டு கம்பெனிகள் நிறுவப்பட்டு உற்பத்தி யை துவங்கிவிட்டன. ஆனால் கோயம்புத்தூர் காரிடாருக்கு நமது  ராணுவ அமைச்சகம் மூலம் எவ்வ ளவு முதலீடுகள் கொண்டு வரப்பட்  டுள்ளது என்பதை பிரதமர் தெரி விக்க வேண்டும்.

2.2.    இரண்டாவதாக தூத்துக்குடி Tuticorin outer Port (தூத்துக்  குடி வெளித் துறைமுகம்). 

தற்போது தேசிய ஜனநாயக  (NDA) கூட்டணியில் இருக்கும் மேனாள் ஒன்றிய அமைச்சர் வாசன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA  -2) அரசில் கப்பல் துறை அமைச்ச ராக இருந்தபோது இத்திட்டம் அறி விக்கப்பட்டு ரூ. 14,000 கோடி நிதி  ஒதுக்கீட்டிற்கு அனுமதியும் வழங் கப்பட்டது என்று திரு. வாசன் அவர்  களே சொன்னது எனது நினைவில் உள்ளது.

ஆனால், கடந்த பத்தாண்டு களாக அத்திட்டத்திற்கு எவ்வித நட வடிக்கையும் எடுக்காமல் தற்போது தான் அறிவிக்கப்பட்டுள்ள திட்டம்  போல பிரதமர் மோடி பேசுவது சரியா? என்பதை திரு. வாசன் அவர்  கள் விளக்கவேண்டும். அதிலும் தற்  போதைய திட்ட மதிப்பீடு ரூ. 7,000 கோடி மட்டுமே என அறிகிறேன்.

3.3.    சுற்றுலாத் துறையின் மூலம்  நிறைய முதலீடுகள் செய்யப்  படும் என பிரதமர் தெரிவித்தார். 

தமிழகத்தின் மிகப்பெரும் சுற்  றுலா மையம் மகாபலிபுரம். தாஜ்  மஹாலைவிட அதிகமாக சுற்றுலா  பயணிகள் அங்குவந்து செல்கின்ற னர். UPA -2இல் திரு. வேலு அவர்கள் ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது சென்னை முதல் கட லூர் (வழி) மகாபலிபுரம் வரை  ரயில்வே பாதை அமைக்கும் பணிக்கு  ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது வரை ஒரு ரூபாய் கூட அதற்கு நிதி  ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதற்  கான தகவல்களை திரு. அன்புமணி  அவர்கள் தெரிவிக்க வேண்டும்.

எஸ்.பீட்டர் அல்போன்ஸ், சிறுபான்மை ஆணையத் தலைவர்