சென்னை, மே 12- தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் வேகமாக அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்துவது குறித்து தலை மைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இதில் காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் பங் கேற்றனர்.
மேலும் மற்ற துறை யைச் சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. கூட்டத்தில் மாநில உள் துறைச் செயலாளர், தமிழக காவல் துறை தலைவர், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. உள்ளிட்ட பலர் தங்கள் கருத்துகளை முன் வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட் களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக ஊடகங்களில் வெளி வந்த செய்திகளை தலைமைச் செயலாளர் சுட்டிக் காட்டியதாகவும் இத்த கைய சூழலில் இந்த ஆலோ சனைக்கூட்டம் முக்கியத்து வம் வாய்ந்தது என்று அவர் கூறியதாகவும் ஊடகத் தக வல் தெரிவிக்கிறது.
போதைப்பொருள் புழக் கத்தை முற்றிலுமாக தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக் கூட்டத்தில் கருத்துகள் பரி மாறிக் கொள்ளப்பட்டன. மேலும், கடந்த காலத்தில் புகையிலைப் பொருள்களின் விற்பனையை தடுக்க மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கை கள் குறித்தும் இந்த கூட்டத் தில் ஆய்வு செய்யப்பட்டது.
மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளையர்கள் மத்தியில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அதற் கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்பட வேண்டும் என் றும் தலைமைச் செயலாளர் வலியுறுத்தியதாக கூறப்படு கிறது.