tamilnadu

img

தெரு குறுக்கே தடுப்பு சுவர்: குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு

சென்னை, மே 11 - தரமணியில் பொதுமக்கள் பயன்படுத்தும் தெருவின் குறுக்கே தடுப்பு சுவர் கட்டுவதற்கு அங்குள்ள குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். தரமணி அண்ணாநகர் பகுதி, எம்ஜிஆர் தெருவில் 300 வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் சுமார் 40ஆண்டுகளாக இந்த தெருவை பயன்படுத்தி வருகின்றனர். 10 அடி அகலம் கொண்ட எம்ஜிஆர் சாலை வழியாக பாதாள சாக்கடை, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு கொண்டு செல்லப்படுகிறது. இந்த தெருவழியாகவே மழைநீர் வெளியேறும். குடியிருப்புவாசிகள் பாண்டியன் தெரு, அண்ணா தெருவிற்கு எம்ஜிஆர் சாலை வழியாகவே செல்ல முடியும்.இந்நிலையில் பாண்டியன் தெருவுடன் எம்ஜிஆர் தெரு இணையும் பகுதியை மறித்து ரஞ்சிதம் மகன் சரவணன் தடுப்புச்சுவர் கட்ட தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இதற்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமையன்று (மே 11)அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி எம்ஜிஆர் தெருவில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாநகர் குடியிருப்போர் பொதுநல சங்கத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், “பொதுச்சொத்தை ஆக்கிரமிக்க யாருக்கும் உரிமை இல்லை. பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள தெருவை மறித்து சுவர்கட்டினால் அதனை தடுப்போம். இந்த பிரச்சனையில் மாநகராட்சியும், வருவாய்த் துறையும் உரிய தலையீடு செய்து சுவர் கட்டுவதை தடுக்கவேண்டும். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம்” என்றார்.இந்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.