tamilnadu

img

மாநிலக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு! - அக்டோபர் 14 வரை கல்லூரி மூடல்

கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், மாநிலக் கல்லூரி 6 நாட்களுக்கு விடுமுறையை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தின் வாயிலில் கடந்த 4-ஆம் தேதி அன்று மாநில கல்லூரியில் பி.ஏ. அரசியல் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர் சுந்தர் (19) என்பவருக்கும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், சுந்தர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான சந்துரு (20), யுவராஜ் (20), ஈஸ்வர் (19), ஹரி பிரசாத் என்கிற புஜ்ஜி (20), கமலேஸ்வரன் (19) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சூழலில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பேற்று வந்த சுந்தர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அடுத்து, மாநில கல்லூரியில் இன்று காலை 11 மணி முதல் வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, அக்டோபர் 14 வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மாணவர்கள் மத்தியில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெறாமல் இருப்பதை தவிர்க்க கல்லூரி நிர்வாகம் 6 நாட்களுக்கு விடுமுறையை அறிவித்தது.