tamilnadu

img

ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு

ஸ்ரீராம் இலக்கியக் கழகம், அண்மையில் சென்னையில் திருக்குறள் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியினை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியரிடையே நடத்தியது. இதில் மொத்தம் 1104 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் துறை துணை ஆணையர் திருநாவுக்கரசு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.நிறுவனத்தின் தலைவர் பி. சரவணகுமார், டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரியின் தலைவர் குமார் ராஜேந்திரன் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.