சென்னை, பிப்.22- மாநில நெடுஞ்சாலை ஆணை யம் உருவாக்கம் உட்பட 13 மசோதாக்கள் ஒரே நாளில் சட் டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழனன்று 12 சட்டமுன்வடிவு கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகு திகளில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் மலக்கசடு, கழிவுநீர் பாதுகாப்பாக அகற்ற ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்வதற் கான சட்ட முன்வடிவை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிமுகம் செய் தார்.
அதில், “மலக்கசடுகள், கழிவு நீரை சேகரித்துக் கொண்டு செல்லு தல், அகற்றுவதற்கான நடவ டிக்கைகளை குறிப்பேட்டில் பதிவு செய்வது, கழிவு நீர் சிந்தினால் அதை வாகன உரிமையாளர், பொறுப்பாளரே அகற்றும் வகை யில் சரத்துகள் இடம்பெற்றுள்ளன. மீறினால், அபராதம் விதிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஊரக உள்ளாட்சி களில் திடக் கழிவுகளை திறம்பட சேகரிப்பதற்கும் அறிவியல் சார்ந்த முறையில் அதை அகற்றுவதற்கும் ஊராட்சியின் மீது ஒரு கடமையை ஏற்படுத்துவதற்கான சட்டத்திருத்த முன்வடிவையும் அமைச்சர் ஐ. பெரியசாமி அறிமுகம் செய்தார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழ் நாடு நெடுஞ்சாலை சட்டத்தில், மாநில நெடுஞ்சாலைகள் அமைப்பு, நெடுஞ்சாலைகள் அதி கார அமைப்பு ஆகியவற்றுக்கு பதில் மாநில தலைமை நிர்வாகி, நிர்வாகிகள் என மாற்றுவதற்கான சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் எ.வ.வேலு அறிமுகம் செய்தார். கடந்தாண்டு ஏப்.1 ஆம் தேதி, சட்டப்பேரவையில் அறிவிக்கப் பட்டபடி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்ற, பொது மற் றும் தனியார் துறை பங்களிப்பு, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்டமுன் வடிவையும் அவர் அறி முகம் செய்தார்.
நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, தரம் உயர்த்த உடனடி, நீண்ட கால திட்டம் தயாரித்தல், பன்னாட்டு நிதியைக் கொண்டுவரு வதற்கான மாதிரிகளை உருவாக்கு வது இந்த ஆணையத்தின் பணி கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆணை யத்துக்கு ஒரு தலைவர், 3 முழு நேரம், 3 பகுதிநேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் மீது நடந்த விவாதத்திற்கு விளக்கம் அளித்த அமைச்சர் எ.வ.வேலு,“அவசரத் தேவையை ஒட்டி தான் இந்த ஆணையம் அமைக்கப்படுகிறது.
சுங்கக் கட்டணம் யார் வசூலிப் பது எவ்வளவு என்பது குறித்து பிறகு, முடிவு செய்து கொள்ள லாம்” என்றார். தொடர்ந்து, வணிகம் சாரா நிறு வனங்களிடமிருந்து கொள்முதல் செய்வது தொடர்பாக ஒளிவுமறை வற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத் திருத்த முன்வடிவு, மாநிலத்தின் எதிர்பாராத செலவுகளுக்காக, அதற்கான நிதியத்தின் உள்ள டக்கத் தொகையை ரூ.150 கோடி யில் இருந்து ரூ.500 கோடியாக உயர்த்தும் வகையில் எதிர்பாரா செலவு நிதி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்வடிவு, வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் மாநில உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை யை 3 விழுக்காடு வரை குறைக்கும் வகையில், நிதிநிலை நிர்வாக பொறுப்புடைமை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவு என 3 சட்டத்திருத்த முன்வடிவுகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிமுகம் செய்தார்.
அதைத்தொடர்ந்து, சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்கு வரத்து அதிகார அமைப்பு (கும்டா)சட்டத்திருத்த முன்வடிவை வீட்டு வசதி அமைச்சர் சு.முத்துசாமி அறிமுகம் செய்தார். இந்த சட்டத் திருத்தம், சென்னையில் நிலவும் போக்குவரத்து சிக்கல்களை தீர்க்க வும், கும்டா அதிகார அமைப்பை மாற்றி அமைக்கவும், அதிகார அமைப்பின் பங்கு மேம்படுத்தவும் வழிவகை செய்கிறது. இந்த அதி கார அமைப்பின் தலைவராக முதல்வர் செயல்படுவார்.
அரசு ஊழியர்கள் ஓய்வு வயது வரம்பு உயர்வு இதையடுத்து, அரசு ஊழியர் களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டது. இதன் அடிப்ப டையில், பாரதியார், பாரதிதாசன், அழகப்பா, மனோன்மணியம், பெரி யார், திருவள்ளுவர், தமிழ்நாடு திறந்தநிலை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகங்க ளின் பதிவாளர்கள் ஓய்வு வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தும் வகையில், சம்பந்தப்பட்ட பல்க லைக்கழகங்களின் சட்டங்களை திருத்துவதற்கான சட்டத்திருத்த முன்வடிவை உயர்கல்வி அமைச் சர் ராஜகண்ணப்பன் அறிமுகம் செய்தார்.
மேலும், கடந்த 1914 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு மருத்துவ பதிவு சட்டத்தை புதுப் பிக்கவும், தேர்தல் நடவடிக்கை களில் சீர்திருத்தம் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மருத்துவ பதிவு சட்டம் இதையடுத்து. தமிழ்நாடு மருத்துவ பதிவு சட்டத்தை நீக்கி, தமிழ்நாடு மாநில மருத்துவ மன்றத்தை உருவாக்குவதற்கான சட்ட முன்வடிவை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிமுகம் செய் தார்.
இந்த சட்ட முன்வடிவை அறி முக நிலையில் எதிர்ப்பதாக முன் னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, அறநிலை யத்துறை கோயில்களுக்கு அறங் காவலர்களாக தொழுநோய் பாதிக் கப்பட்டவர்களையும் நியமிக்கும் வகையில் சட்ட திருத்தத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறி முகம் செய்தார். தொடர்ந்து, ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டம் தயா ரித்தல், ஒப்புதல் செய்தல், கண்கா ணித்தல் ஆகியவற்றுக்காக ஒரு சட்டத்தை உருவாக்குவதற்கான சட்ட முன்வடிவை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் அறிமுகம் செய்தார். இந்த 12 சட்ட முன்வடிவுகளும் பிரிவு வாரியாக ஆய்வு செய்யப் பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
சாதிவாரி கணக்கெடுப்புக்கு
எதிரானவர்கள் இல்லை
பாமகவுக்கு முதலமைச்சர் பதிலடி
சென்னை, பிப்.22-
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை திமுக எதிர்க்கவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாமக எம்.எல்.ஏ. க்கள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பதிலளித்து பேசுகையில், “சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து இந்த அவையில் ஏற்கனவே பேசப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பேரவையிலும் பல நேரங்களில் பதில் சொல்லப்பட்டுள்ளது. இதை எல்லாம் தாண்டி பாமக நிறுவனர் ராம தாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, பாமக எம்எல்ஏக்கள், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நேரடியாக சந்தித்து வலி யுறுத்தியுள்ளனர். நீங்கள் சொல்கிற கொள்கைக்கு நாங்கள் எதிரான வர்கள் அல்ல. உங்களுக்கு சாதகமாகத்தான் இருந்து வருகிறோம். இந்த விளக்கத்திற்குப் பிறகு நீங்கள் என்ன செய்தாலும் அதற்கு நான் தடை சொல்ல விரும்பவில்லை” என்றார்.
சட்டப்பேரவை ஒத்திவைப்பு
சென்னை,பிப்.22- தமிழ்நாடு சட்டப்பேர வைக் கூட்டம் ஆளுநர் உரை யுடன் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. அதன் பின்னர் 3 நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற் றது. இதைத்தொடர்ந்து கடந்த 19 ஆம் தேதி நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவும், 20 ஆம் தேதி வேளாண் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர்.இதனைத் தொடர்ந்து விவாதம் நடை பெற்றது. அமைச் சர்கள் பதி லுரைக்குப் பிறகு, மசோதாக் கள் நிறைவேற்றப்பட்டன. பிறகு, சட்டப்பேரவைக் கூட் டத் தொடர் மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.