tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அவருக்கு புகழஞ்சலி

மாமேதை காரல் மார்க்சின் 201ஆவது பிறந்த தினத்தைத்தையொட்டி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. கடலூர் நகரக் குழு சார்பில் 50 வாரங்களுக்கு ஞாயிறு தோரும் மார்க்ஸ் குறித்த வகுப்பிற்கான முதல் வகுப்பு துவக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமை தாங்கினார், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மருதவாணன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.பாஸ்கரன், நகர் குழு உறுப்பினர்கள் ஆனந்த், தமிழ்மணி, ஸ்டாலின், திருமுருகன், ஜோதிலிங்கம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மார்க்ஸ் குறித்து கவிஞர் பால்கி சிறப்புரையாற்றினார். 


காரல் மார்க்ஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், நிர்வாகிகள் எம்.வீரபத்திரன், ராமதாஸ், பன்னீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  


சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான தோழர் கே.ஆர்.சுந்தரம் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் மாவட்டச் செயலாளர் எஸ் தயாநிதி தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. உடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏகலைவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிஎஸ்.மகாலிங்கம் நரசிம்மன், திலீபன், காட்பாடி தாலுகாச் செயலாளர் கே.ஜெ. சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



;