tamilnadu

img

பொங்கல்:தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்தது முன்பதிவு டிக்கெட்கள்

பொங்கல் முன்பதிவுக்கான ரயில் டிக்கெட்டுகள் இன்று காலை துவங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது. 
தமிழர் திருநாளான பொங்கள் பண்டிகைக்கு  சென்னையில் பணிபுரிபவர்கள் பெரும்பாலானோர் சொந்த ஊர் செல்வது வழக்கம். இதனால் அப்போது பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் கடுமையான கூட்ட நெரிசல் காணப்படும். இந்நிலையில் இன்று காலை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. 
ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களாக நீட்டிக்கப்பட்டதையடுத்து,  ஜனவரி 10ம் தேதி பயணிப்பதற்கான ரயில் டிக்கெட்டுகளை இன்று (செப்.12) முன்பதிவு செய்யலாம். இதனால், எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பொதுமக்கள் காத்திருந்து முன் பதிவு செய்தனர்.  

காலை  8 மணிக்கு முன் பதிவு துவங்கியதும், ஆர்வத்துடன் பயணிகள் டிக்கெட்டுகளை பதிவு செய்ய துவங்கினர். ஆனால், சில நிமிடங்களிலேயே தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

ஜனவரி 11ம்தேதிக்கான முன்பதிவு செப்.13ம் தேதியும், ஜனவரி 12ம் தேதிக்கான முன்பதிவு செப்.14ம் தேதியும், ஜனவரி 13ம் தேதி முன்பதிவு செப்.15ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். பொங்கலுக்கு முந்தைய நாள் ஜனவரி 14-ம் தேதிக்கான முன்பதிவு செப்.16ம் தேதி தொடங்கும்.

அதேபோன்று சொந்த ஊரில் இருந்து திரும்பும் போது, ஜனவரி 17-ம் தேதிக்கான முன்பதிவு செப்.19ம் தேதியும், ஜனவரி 18ம் தேதிக்கான முன்பதிவு செப்.20ம் தேதியும், ஜனவரி 19ம் தேதி  முன்பதிவு செப்.21ம் தேதியும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
 

;