சென்னை, ஏப்.20- தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளி லும் வெள்ளிக்கிழமை (ஏப்.19) விறு விறுப்பாகவும் அதேநேரம் எந்த அசம்பா விதங்களும் இல்லாமல் அமைதியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் முடி வடைந்தது.
இதையடுத்து, இரவு 7 மணி நிலவரப் படி, மாநிலம் முழுவதும் சராசரியாக 72.09 விழுக்காடு வாக்குகள் பதிவான தாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்தார்.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்க ளவைத் தொகுதியில் 75.64 விழுக்காடு வாக்குகளும், தருமபுரியில் 75.44 விழுக் காடு வாக்குகளும் பதிவாகின. குறைந்த பட்சமாக மத்திய சென்னையில் 67.35 விழுக்காடும், தென் சென்னையில் 67.82 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள் ளன என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், நள்ளிரவு 12.11 மணிக்கு, தில்லியில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், தமிழ்நாட்டில் பதி வான மொத்த வாக்குகள் 69.46 விழுக்காடு என்று கூறியது.
அதாவது, தமிழக தலைமைத் தேர் தல் அதிகாரி அறிவித்திருந்த வாக்குப் பதிவு விழுக்காட்டைக் காட்டிலும் 2.63 விழுக்காடு குறைவாக வாக்குப்பதிவு நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், தொகுதி வாரியான வாக்குப் பதிவு விகிதத்திலும் வேறுபாடுகள் காணப் பட்டது. இது சர்ச்சையையும், சந்தே கத்தையும் ஏற்படுத்தியது.
நட்சத்திர வேட்பாளர்கள்
அதிலும் குறிப்பாக, நட்சத்திர வேட் பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் 13 விழுக்காட்டுக்கும் மேல் வாக்குகள் விகிதத்தில் வித்தியாசம் காணப்பட்டது. இது அரசியல் கட்சிகள் மட்டுமின்றி வேட்பாளர்கள் மத்தியில் பெரும் குழப் பத்தை ஏற்படுத்தியது.
திமுகவின் தற்போதைய மக்க ளவை உறுப்பினர் தமிழச்சி தங்கப் பாண்டியன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் போட்டியிட்ட தென் சென்னை யில் முதலில் 67.82 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதி காரி சத்யபிரதா சாகுவின் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
பின்னர், 13.55 விழுக்காடு வாக்கு கள் குறைத்து 54.27 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதேபோல், தயாநிதி மாறன் போட்டி யிடும் மத்தியச் சென்னையில் முதலில் 67.35 விழுக்காடு வாக்குப்பதிவு என அறி விக்கப்பட்ட நிலையில், பின்னர் 53.91 என்று 13.44 விழுக்காடு வாக்குகள் குறைத்து அறிவிக்கப்பட்டது.
அதேபோல திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி போட்டியிடும் தூத்துக்குடியில் முதலில் 70.93. விழுக்காடு வாக்குகள் பதிவானது என்று அறிவித்திருந்த நிலையில், 59.96 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவான தாக 10.97 விழுக்காடு வாக்குகளை குறைத்து இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
திமுக பொருளாளர் டி.ஆர். பாலு போட்டியிடும் திருபெரும்புதூரில் முத லில் அறிவித்ததை விட 9.58 விழுக்காடு வாக்குகளும், கலாநிதி வீராசாமி போட்டி யிட்ட வடசென்னையில் முதலில் அறி வித்ததை விட 9.13 விழுக்காடும், காங்கி ரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் போட்டி யிட்ட சிவகங்கையில் முதலில் அறிவித் ததை விட 7.11 விழுக்காடு வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசன் போட்டி யிட்ட மதுரையில் முதலில் அறிவித்ததை விட 7.06 விழுக்காடு வாக்குகளும் குறைத்து அறிவிக்கப்பட்டன. பாஜக வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோர் போட்டியிட்ட நெல்லை மற்றும் கோவையில் 6.36 விழுக்காடு வாக்குப்பதிவு குறைத்து அறிவிக்கப்பட்டது.
அதே சமயம், பாமக சார்பில் சவு மியா அன்புமணி போட்டியிடும் தருமபுரி யில் முதலில் அறிவித்ததை விட வாக்கு சதவிகிதம் 6.04 விழுக்காடு (75.44 விழுக்காட்டிலிருந்து 81.48 விழுக் காடாக) அதிகரித்து அறிவிக்கப்பட்டது. மேலும் சேலம், கரூர், நாமக்கல் தொகுதி களிலும் முதலில் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிக வாக்குகள் பதிவான தாக நள்ளிரவில் இந்திய தேர்தல் ஆணை யம் அறிவித்தது.
பொதுவாக வாக்குப்பதிவு முடிந்து அறிவிக்கப்படும் வாக்குப்பதிவு விழுக் காட்டிற்கும், இறுதியாக அறிவிக்கப் படும் வாக்கு விழுக்காட்டிற்கும் இடையே ஓரிரு விழுக்காடு அளவிற்கு ஏற்ற இறக் கம் இருக்கும். குறிப்பாக சொன்னால் ஏற்றமே இருக்கும்.
ஆனால், தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு முத லில் அறிவித்த வாக்கு சதவிகிதத்தைக் காட்டிலும், இந்திய தேர்தல் ஆணை யம் சுமார் 10 விழுக்காடு அளவிற்கு வாக் குப்பதிவை குறைத்து நள்ளிரவில் அறிவித்தது புதிய நடைமுறையாகவும், இதுவரை இல்லாத ஒன்றாகவும் இருந்தது. அத்துடன் இது பொதுமக்கள் இடையே குழப்பத்தையும், சந்தே கத்தையும் ஏற்படுத்தியது.
இவை அனைத்தும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மட்டுமே. அஞ்சல் வாக்குகள் எண் ணிக்கை இதில் சேராது.
இதனிடையே, மாநில தலைமை தேர் தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தொகுதி வாரியாக ஆய்வு செய்தார். இந்நிலை யில், சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தேர் தல் அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கி றது.
உதாரணத்திற்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திருவண்ணாமலை தொகுதியில் 73.35 விழுக்காடு வாக்கு கள் பதிவானதாக அறிவித்திருந்தார். இதனை மாற்றி இந்திய தேர்தல் ஆணை யம் நள்ளிரவில் 73.88 விழுக்காடு என்று அறிவித்தது. ஆனால், சம்பந்தப்பட்ட தொகுதியில் தேர்தல் அதிகாரி 74.22 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக கூறியுள்ளார்.
திருவள்ளூரில் 71.87 விழுக்காடு வாக்குப்பதிவு என்பது சத்யபிரதா சாகு வெளியிட்ட தகவலாகும். இந்திய தேர் தல் ஆணையம் இந்த எண்ணிக்கையை 68.31 விழுக்காடாக குறைத்தது. தொகுதி யின் தேர்தல் அதிகாரி இன்னும் குறைத்து அதனை 68.26 விழுக்காடு என்று அறி வித்துள்ளார். இதேபோல கரூர் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளிலும் மூன்று வித மான வாக்குப்பதிவு சதவிகிதம் வெளி யிடப்பட்டு உள்ளது.
கடைசியாக, சனிக்கிழமை இரவு 7.20 மணிக்கு இந்திய தேர்தல் ஆணை யம் தமிழ்நாட்டில் 69.46 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வ மாக அறிவித்துள்ளது. அதாவது, வெள் ளிக்கிழமை நள்ளிரவு அறிவித்ததை அப்படியே உறுதி செய்துள்ளது. எனி னும், இந்த வாக்குப்பதிவு விழுக்காடும் உத்தேசமானது தான் என்றும் கூறி மீண்டும் குழப்பியுள்ளது.
இதனால், தமிழகத்தில் மக்கள வைத் தேர்தல் வாக்குப்பதிவு விழுக் காட்டு குளறுபடியாகவும், இப்போது வரை மர்மம் நீடிப்பதாகவும் மாறியிருக்கி றது.