tamilnadu

தமிழ்நாட்டின் அரசியல் போராட்ட வரலாறு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், நாட்டின் விடுதலைக்காக போராடியவருமான தோழர் சங்கரய்யா அவர்கள் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாறாக இருந்தாலும், போராட்ட வரலாறாக இருந்தாலும் அதை தோழர் சங்கரய்யா அவர்களை தவிர்த்துவிட்டு எழுத முடியாது என்று கூறும் அளவுக்கு அனைத்து அரசியல் நிகழ்வுகளிலும், போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். கொண்ட கொள்கையில் மிகவும்  உறுதியாக இருந்தவர். அதே நேரத்தில் நூற்றாண்டைக் கடந்து தமது இறுதிக் காலம் வரை மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். ஏராளமான இளம் தலைவர்களை உருவாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர்.

தோழர் சங்கரய்யா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும்  மார்க்சிஸ்ட் கட்சியி னருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனு தாபங்களையும் தெரிவித்துக் கொள்கி றேன்.

மருத்துவர் 
அன்புமணி ராமதாஸ், தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி