காவல்துறையினர் துன்புறுத்தல் கூலித் தொழிலாளி உயிரிழப்பு
சிபிஎம் கோரிக்கையை ஏற்று விசாரணை நடத்த புதுவை ஆட்சியர் உத்தரவு
புதுச்சேரி, மே 24 - கூலித் தொழிலாளி அர்ஜுனன் உயிரிழப்புக்கு காரணமான காவல் நிலைய ஆய்வாளர், காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அர்ஜுனன் (47). இவரது மனைவி கலையரசியை விசாரணைக்காக அழைத்து செல்கிறோம் என்று கூறி தவளக்குப்பம் காவல் நிலை யத்திற்கு அழைத்து சென்று அடித்து துன்புறுத்தியதாக கூறப்படு கிறது. மேலும், கணவர் அர்ஜுனனை யும் காவலர்கள் அடித்து விசாரித்துள்ள தாக தெரிகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அர்ஜுனன் கடந்த சில நாட்களாகவே சோர்ந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை (மே 23) அர்ஜுனன் திடீரென்று மர்மமான முறையில் இறந்துள்ளார். தவளக்குப்பம் காவல் நிலை யத்தில் நடந்த துன்புறுத்தல் சம்பவம் இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆர். ராஜாங்கம், வெ.பெருமாள், நகர கமிட்டி செயலாளர் ஜோதிபாசு, மாநில குழுக் உறுப்பினர் சரவணன் ஆகி யோர் கூலித் தொழிலாளி அர்ஜுனன் குடும்பத்தினருடன் சனிக்கிழமை(மே 24) மாவட்ட ஆட்சியர் குலோத்துங் கனை சந்தித்தனர். அப்போது, தவளக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் சண்முக சத்யா, உதவி ஆய்வாளர் சுரேஷ், காவலர்கள் பிருந்தா, வசந்த் ஆகியோர் விசாரணை என்ற போர்வையில் கலையரசியை கடுமை யாக தாக்கினர். மனைவியை தாக்கிய சம்பவம் அர்ஜுனனை கடுமையாக பாதித்துள்ளது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி பின்னரே கூலி தொழிலாளி அர்ஜுனன் உயி ரிழந்துள்ளார். ஆட்சியர் உறுதி அர்ஜுனனின் உயிரிழப்புக்கு காரணமான காவல் நிலைய ஆய்வாளர்கள், காவலர்கள் மீது கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். காவல்துறையின் தாக்குதலுக்கு ஆளான கலையரசிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். இரண்டு பிள்ளைகள் உள்ள கலையரசி குடும்பத்திற்கு அரசு வேலையும், நிவாரணமும் புதுச்சேரி அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர். சிபிஎம் தலைவர்களின் இந்த கோரிக்கையை ஆட்சியர் குலோத்துங்கன் ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் அதி காரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.