tamilnadu

img

பிஎம்கேர்ஸ் நிதி: உச்சநீதிமன்றம் தீர்ப்புக்குப்பின் எழும் கேள்விகள்

சென்னை:
பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக்கோரி தொடரப் பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் பிரதமருக்கு ஆதரவாக  தீர்ப்பளித்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:பிஎம் கேர்ஸ் நிதியின் சட்டப் பூர்வத்தையும், சட்டப்பொறுப்பு குறித்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது. ஆனால், அறிவார்ந்தவர்கள், கல்விவட்டாரங்களில் பிஎம் கேர்ஸ் குறித்த பல்வேறு கேள்விகள் நீண்டகாலத்துக்கு எழுப்பப்படும். ஏனென்றால், பிஎம் கேர்ஸ் நிதியின் உண்மைத்தன்மை, வெளிப் படைத்தன்மை, நிர்வாகச்செயல் பாடுகள் ஆகியவை குறித்து நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிடவில்லை.பிஎம் கேர்ஸ் நிதிக்கு யார் நன்கொடை அளித்துள்ளார்கள்? 2020,மார்ச் மாதத்துக்குள் ரூ.3,076 கோடி நிதி யார் கொடுத்தது?. சீன நிறுவனங்களை அதில் இணைத் துள்ளீர்களா? ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து எவ்வளவு பணம் பெற் றுள்ளீர்கள்? யாரெல்லாம் நன் கொடை அளித்துள்ளார்கள்? கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.பிஎம் கேர்ஸ் நிதியை தொடக்கத்திலிருந்து யாரெல் லாம் பெற்றுள்ளார்கள்? பணம் பெற்றவர்களிடம் இருந்து அந்த பணம் முறையாக பயன்படுத்தப் பட்டதா என்பதற்கான பயன் பாட்டுச் சான்று பெறப்பட்டுள்ளதா?  ஆர்டிஐ விசாரணைக்கு அப்பாற் பட்டதாக இந்த நிதி இருந்தால், இந்த வலிமையான கேள்விகளுக்கு யார் பதில் அளிப்பது?இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

;