தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ஆம் தேதி நிறைவடைந்தது. இதன் தேர்வு முடிவுகள் மே 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இதனிடையே, மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதால் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வேறு தேதிக்கு மாற்ற பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.