tamilnadu

img

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை  வெளியாகிறது

சென்னை:
தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ்-2 மறுவாய்ப்பு தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை (ஜூலை 31) இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.இதுகுறித்து  தமிழக கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-பிளஸ்-1 தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கும் மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.மேலும் பிளஸ்-2 மறு தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை  வெளியிடப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 8.32 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1  தேர்வு முடிவுகள்  வெளியிடப்படுகிறது பிளஸ்-2 மறுவாய்ப்பு கடைசித்தேர்வை 519 மாணவ, மாணவிகள் எழுதியதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

;