tamilnadu

img

சென்னையில் பெண்களுக்காக pink auto திட்டம் அறிமுகம்

சென்னை,அக்டோபர்.22- பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் சென்னையில் பிங்க் ஆட்டோக்கள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, CNG/Hybrid ஆட்டோ வாங்க சென்னையில் 250 பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியமாக அரசு வழங்கும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கும் இத்திட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. 10ஆஅ வகுப்பு தேர்ச்சி பெற்ற 25- 45 வயது உடைய பெண்கள் பிங்க் ஆட்டோ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். 
பெண் ஓட்டுநர்கள் சென்னை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நவம்பர் 23க்குள் விண்ணப்பிக்கலாம் ஒவ்வொரு பிங்க் ஆட்டோவிலும் காவல்துறை உதவி எண்களுடன் GPS பொருத்தப்பட்டிருக்கும்